அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!

Nov 19, 2025,02:44 PM IST

- J.லீலாவதி


ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். 

என் தந்தை. 

தன்னைத் தேடி ஒரு பயணம். 

அழகான கிராமத்தில் அரச மரம். 

அந்த அரச மர நிழலை நம்பி 

நான்கு பறவைகள் 

அழகாய் வாழ்ந்த நாட்கள்.

இரைதேட சென்ற

ஆண் பறவை திரும்பவில்லை. 

ஆலமரமும் சாய்ந்தது. 

வேரின் பிடியின்றி 

விழுந்து விட்டன அந்த மூன்று பறவைகள். 

அதில் விழுந்த நான் என்னை தேடினேன். 




காணவில்லை என்னை. 

நடந்தேன் கண்ணெதிரே

ஆயிரம் மரங்கள் 

அதில் எதுவும் நான் தேடியது இல்லை. 

அந்த மரத்தில் நிழலில்லை. 

கனியும் சுவையில்லை. ஏன்?.

நான் தேடிய மரம் அது அல்ல. 

அதே மரத்தின் நிழலை தேடி அலைகிறேன். 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

எத்தனை மரங்கள் இருந்தாலும். 

அந்த மரத்தின் சுவையும் 

அந்த மரத்தின் நிழலும் 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

இதில் என்னையும் சேர்த்து தேடுகிறேன் 

தேடிக் கொண்டிருக்கிறேன்


(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதியோர் இல்லம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!

news

எதையும் தாங்கி நிற்கும்.. ஒரு மௌன மலை…!

news

அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

இருபத்தைந்து அகவையில்.. பருந்தாய் பறக்கும்.. பணம் தேடி மனம்.. ஆண்கள் தினம்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்