அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!

Nov 19, 2025,02:44 PM IST

- J.லீலாவதி


ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். 

என் தந்தை. 

தன்னைத் தேடி ஒரு பயணம். 

அழகான கிராமத்தில் அரச மரம். 

அந்த அரச மர நிழலை நம்பி 

நான்கு பறவைகள் 

அழகாய் வாழ்ந்த நாட்கள்.

இரைதேட சென்ற

ஆண் பறவை திரும்பவில்லை. 

ஆலமரமும் சாய்ந்தது. 

வேரின் பிடியின்றி 

விழுந்து விட்டன அந்த மூன்று பறவைகள். 

அதில் விழுந்த நான் என்னை தேடினேன். 




காணவில்லை என்னை. 

நடந்தேன் கண்ணெதிரே

ஆயிரம் மரங்கள் 

அதில் எதுவும் நான் தேடியது இல்லை. 

அந்த மரத்தில் நிழலில்லை. 

கனியும் சுவையில்லை. ஏன்?.

நான் தேடிய மரம் அது அல்ல. 

அதே மரத்தின் நிழலை தேடி அலைகிறேன். 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

எத்தனை மரங்கள் இருந்தாலும். 

அந்த மரத்தின் சுவையும் 

அந்த மரத்தின் நிழலும் 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

இதில் என்னையும் சேர்த்து தேடுகிறேன் 

தேடிக் கொண்டிருக்கிறேன்


(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்