அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!

Nov 19, 2025,02:44 PM IST

- J.லீலாவதி


ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். 

என் தந்தை. 

தன்னைத் தேடி ஒரு பயணம். 

அழகான கிராமத்தில் அரச மரம். 

அந்த அரச மர நிழலை நம்பி 

நான்கு பறவைகள் 

அழகாய் வாழ்ந்த நாட்கள்.

இரைதேட சென்ற

ஆண் பறவை திரும்பவில்லை. 

ஆலமரமும் சாய்ந்தது. 

வேரின் பிடியின்றி 

விழுந்து விட்டன அந்த மூன்று பறவைகள். 

அதில் விழுந்த நான் என்னை தேடினேன். 




காணவில்லை என்னை. 

நடந்தேன் கண்ணெதிரே

ஆயிரம் மரங்கள் 

அதில் எதுவும் நான் தேடியது இல்லை. 

அந்த மரத்தில் நிழலில்லை. 

கனியும் சுவையில்லை. ஏன்?.

நான் தேடிய மரம் அது அல்ல. 

அதே மரத்தின் நிழலை தேடி அலைகிறேன். 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

எத்தனை மரங்கள் இருந்தாலும். 

அந்த மரத்தின் சுவையும் 

அந்த மரத்தின் நிழலும் 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

இதில் என்னையும் சேர்த்து தேடுகிறேன் 

தேடிக் கொண்டிருக்கிறேன்


(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு

news

முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?

news

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்

news

தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??

news

பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்

news

நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்

news

நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?

news

ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு

news

சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!

அதிகம் பார்க்கும் செய்திகள்