துபாய்: ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் மிகப் பெரிய விலைக்கு இரு பெரும் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடந்து வரும் இன்றைய ஏலத்தில் காலையிலிருந்தே பல சர்ப்பிரைஸ்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கமின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இது அனைவரையும் அதிர வைத்தது. இவ்வளவு பெரிய தொகையா என்று பலரும் வியந்து போனார்கள்.
ஆஸ்திரேலியா கேப்டனான பாட் கமின்ஸ், அனேகமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால்தான் பெரிய விலை கொடுத்து அவரை உள்ளே இழுத்தது சன் ரைசர்ஸ் அணி.
இந்த நிலையில் இதை மிஞ்சும் வகையில் இன்னொரு ஆஸ்திரேலிய வீரரின் ஏலம் நடந்தது. அவர்தான் மிட்சல் ஸ்டார்க். இவரை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கததா நைட் ரைடர்ஸ் அணியும் கடுமையாக மோதினர். இரு அணிகளும் மாறி மாறி விலை வைக்க நீண்ட நேரம் இந்த ஏலம் நடந்தது.
இரு அணிகளிடமும் தலா ரூ. 31 கோடி கையில் இருந்த நிலையில் இருவரும் மாறி மாறி ரேட்டை உயர்த்திக் கொண்டே போன நிலையில் கடைசியில் ஒரு வழியாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்சல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுத்தது.
ஆத்தாடி இம்புட்டு தொகையா என்று மலைத்துப் போகும் அளவுக்கு விலை போயுள்ளார் மிட்சல் ஸ்டார்க். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு யாரும் விலை போனதில்லை. அந்த சாதனையைப் படைத்துள்ளார் மிட்சல் ஸ்டார்க். பார்க்கலாம்.. எந்த அளவுக்கு இவரது ஆட்டம் இருக்கும் என்பதை.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}