"நீ என்னத்த கிழிக்க போறேன்னு கேட்டான்".. "இறுகப்பற்று" அபர்ணதி சூப்பர் பதிலடி!

Oct 13, 2023,11:35 AM IST

- சங்கமித்திரை


சென்னை: நீயெல்லாம் சினிமாவில் நடிக்கப் போய் என்னத்த கிழிக்கப் போறேன்னு என்னோட நண்பன் ஒருத்தன் கேட்டான்.. ஆனால் இன்னிக்கு நான் நடிச்ச இறுகப் பற்றுப் படத்தை பார்க்க டிக்கெட் வாங்கி கிழித்துத போட்டுத்தான் பார்த்துள்ளான் என்று படத்தின் நாயகி அபர்ணதி சூப்பராக கூறியுள்ளார்.


ஊரெல்லாம் ஒரே பேச்சுதான்.. இறுகப்பற்று படம் பார்த்தாச்சா.. நல்லாருக்காமே.. அந்த அளவுக்கு படம் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. பிரமாண்டங்களுக்கு மத்தியில்  இதுபோல அவ்வப்போது அழகான அமைதிப் பூக்களும் திரையுலகில் பூக்கும்.. பூக்கும்போதே அதன் மணத்தை நுகர்ந்து அனுபவித்து விட வேண்டும். அதுதான் இப்போது மக்கள் இறுகப்பற்று பக்கம் திரும்பக் காரணம்.




படம் பெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் இறுகப் பற்று குழுவினர் சச்ஸஸ் மீட் நடத்தினர். அதில் இறுகப் பற்று நாயகியரில் ஒருவரான அபர்ணதி பேசினார். அப்போது அவரது பேச்சு உருக்கமாக இருந்தது. அபர்ணதி பேச்சிலிருந்து:


இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். 




இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு  சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி  'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான். 


இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம். 


விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது. விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குனர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார் என்றார் அபர்ணதி.


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா:


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது கூறியதாவது: இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்து அதற்கேற்றபடி தான் பாடல்களை எழுதினேன். அதற்கு வசதியாக பாலாஜி மணிகண்டன் தேவையான காட்சிகளை அழகாக படத்தொகுப்பு செய்து தந்தார். 




எனக்கும் இயக்குனருக்கும் ஒவ்வொரு பாடலை உருவாக்கும்போதும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது.  இப்படத்தில் விக்ரம் பிரபுவின் காஸ்டியூம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த படத்தில் அவரை பார்த்துவிட்டு இதுதான் நிஜமான அவரா, இல்லை டாணாக்காரன் படத்தில் பார்த்த அவர் தான் உண்மையா என்கிற ஒரு குழப்பமே எனக்கு ஏற்பட்டு விட்டது. 


ஸ்ரீ, சானியா அய்யப்பன் ஜோடியினர் இன்றைய இருக்கிற இளைஞர்களை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர். லாப நோக்கில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் மத்தியில் நல்ல கதைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்