சென்னை: தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்த தாமதமும் இல்லை. 13% மனுக்கள் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, ஆளுநர் தாமதப்படுத்துவதாக தமிழக அரசு குற்றம்சாட்டு வைக்கப்பட்ட, நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறோம்.

மக்கள் நலனுக்கு எதிரான சில ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 3 மாதங்களுக்குள் 95 சதவீதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாக அரசு வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்
கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை
ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!
ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)
தனிமைக் காதலன்.. எழுதுகோலுடன் என் பொழுதுகள்!
Sasikala Viswanathan: சந்தோசம்.. ஒரு 50 நொடிக் கதை!
{{comments.comment}}