திண்டுக்கல்: தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.3000க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தை மாதம் என்றாலே விசேஷங்கள் அதிகம் இருக்கும். திருமணம், புதுமனை புகுவிழா, காதுகுத்து விழா உள்ளிட்ட அனைத்து விஷேசங்களும் வைப்பதற்கு உகந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் சற்று பனியும் அதிகமாக பொழியும் என்பதால் பூக்களின் வரத்து குறைந்தும், அத்துடன் பூ தேவையும் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளான குட்டத்து ஆவாரம்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை, சென்னை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து கேரளாவிற்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. இந்த மாதம் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் பூ தேவையும் அதிகம் இருப்பதால் மல்லிகை பூ கிலோ ரூ.3000த்திற்கு விற்கப்பட்டு வருகிறது.
கனகாம்பரம், முல்லைப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி பூ, மரிக்கொழுந்து, காக்கரட்டான் உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் இன்று அதிகமாவே உள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பூ தேவை இருப்பதனால் திண்டுக்கல் மார்கெட்டில் பொதுமக்களின் கூட்டமும் சற்று அதிகமாகவே உள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}