சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நிமிடத்தில் விலகினார். அவர் ஓய்வெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் ஏற்கனவே 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ஆஸ்திரோலியா அணி வெற்றி பெற்ற நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

முதல் டெஸ்டிற்கு பும்ரா கேப்டனாக இருந்தார். அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு பிறகு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். ஆனால் இதில் 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டிராவும் ஆனதால் ரோகித் சர்மா தான் காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் ஒரு பேஸ்ட்ஸ்மேனாக கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 10க்கும் கீழே போய் விட்டது.
இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் ஜனவரி 03ம் தேதி துவங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்வதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதுவதற்கான வாய்ப்பு கிடைக்கவும் சாதமாக சூழல் உருவாகும். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித்திடமிருந்து கேப்டன் பொறுப்பை பும்ராவுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் ரோகித் சர்மா. அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு இந்தப் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்குமாறு ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் கேட்டிருந்ததாகவும், அதை அவர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மாவிற்கு பதில் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவே கேப்டனாக செயல்படுகிறார். சுப்மன் கில், அணியில் இடம் பிடித்துள்ளார். மீண்டும் துவக்க வீரராக கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இந்திய அணி தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது. விராத் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றி விட்டார். வெறும் 17 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில்லும் 20 ரன்களில் வெளியேறி விட்டார். தேநீர் இடைவேளை சமயத்தில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}