தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாப்பாளர் (ஆண்) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சகி என்ற பெயரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு மையத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப வன்முறை உள்ளிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் சகி ஒன் ஸ்டாப் மையம் தொடங்கப்படும். இந்த மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யப்படும். மேலும் மன நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்த மையம் செய்கிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாவலர்(ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.
சகி ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், மற்றும் சம்பளம், குறித்த விவரங்களை www.tenkasi.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் tenkasi.nic./forms/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 140 /5B ஸ்ரீ சக்தி நகர், தென்காசி -627811.
இறுதி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.7.2024 அன்று மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}