ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை.. நீங்க தென்காசி மாவட்ட சேர்ந்தவரா.. அப்ப உங்களுக்குத்தான் இது!

Jul 12, 2024,03:23 PM IST

தென்காசி:   தென்காசி மாவட்டத்தில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாப்பாளர் (ஆண்) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


சகி என்ற பெயரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு மையத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப வன்முறை உள்ளிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் சகி ஒன் ஸ்டாப் மையம் தொடங்கப்படும். இந்த மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யப்படும். மேலும் மன நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்த மையம் செய்கிறது.




அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாவலர்(ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.


சகி ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், மற்றும் சம்பளம், குறித்த விவரங்களை  www.tenkasi.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.


விருப்பமுள்ளவர்கள் tenkasi.nic./forms/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 140 /5B  ஸ்ரீ சக்தி நகர்,  தென்காசி -627811.


இறுதி நாள்: 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.7.2024 அன்று மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்