Kalaiyarasi Muthuvel Poem: நிழல்!

May 26, 2026,03:47 PM IST

- கவி.கலை 


உதவிக்கு அழைத்தும் 

உடன் வராத  

உறவுகள் மத்தியில்  

உதவ முடியாத போதும்  

உடன் வருபவள்,  

 

காயப்பட்டு நான்  

கலங்கிடும் போதும்  

கல்நெஞ்சக்காரியாய்  

கணப்பொழுதும் 

என்னோடு இருப்பவள் , 


 


வெறுமையில் நான் இருந்தாலும்  

கருமை நிறம் கொண்டு  

பொறுமையாய் 

என்னருகில் இருப்பவள். 

 

நான் முன் நடக்க  

அவள் பின் நடந்தாலும்  

பொறாமையின்றி  

பெருமை பாராட்டும்  

பெருந்தன்மைக்காரி  

 நிழல் என்னும் என்னவள்.  


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

news

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்

news

ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

news

தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

news

தனிமைக் காதலன்.. எழுதுகோலுடன் என் பொழுதுகள்!

news

Sasikala Viswanathan: சந்தோசம்.. ஒரு 50 நொடிக் கதை!

news

Kalaiyarasi Muthuvel Poem: நிழல்!

news

சிந்தனைச் சிதறல்.. மனதைக் கட்டுப்படுத்தும் எசமான்.. நாம்தான்!

news

செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்