கர்நாடகாவில் துணிகரம்.. ஏடிஎம் மைய ஊழியரை சுட்டுக் கொன்று.. பணப் பெட்டியுடன் தப்பிய கொள்ளையர்கள்

Jan 16, 2025,04:46 PM IST

பீதர்: கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது பணக்கட்டுக்கள் இருந்த பெரிய பெட்டியை 2 கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளைக்காரரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.


பீதரில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப பலத்த பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது பணப் பெட்டியை இறக்கி ஏடிஎம் மையத்தில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்தனர்.




துப்பாக்கி சகிதம் வந்திருந்த அவர்கள் மின்னல் வேகத்தில் ஊழியர்களைத் தாக்கி பணப் பெட்டியைப் பறித்தனர். அவர்களை வங்கி ஊழியர்கள் தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு வங்கி ஊழியர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கையில் கிடைத்த பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு பைக்கில் வைத்துக் கொண்டு இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.


தூக்க முடியாமல் அந்தப் பெட்டியை வண்டியில் அவர்கள் வைத்துக் கொண்டு தப்பிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  சம்பவம் நடந்த இடத்திற்கு எதிரேதான் எஸ்பிஐ வங்கியின் தலைமை கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் துணிச்சலுடன், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இப்படி துணிகரமாக கொள்ளையர்கள் நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொள்ளையர்களை பொதுமக்கள் தரப்பில்  சிலர் தடுக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முடியாமல் போனது.


இரு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்