கர்நாடகாவில் துணிகரம்.. ஏடிஎம் மைய ஊழியரை சுட்டுக் கொன்று.. பணப் பெட்டியுடன் தப்பிய கொள்ளையர்கள்

Jan 16, 2025,04:46 PM IST

பீதர்: கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது பணக்கட்டுக்கள் இருந்த பெரிய பெட்டியை 2 கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளைக்காரரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.


பீதரில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப பலத்த பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது பணப் பெட்டியை இறக்கி ஏடிஎம் மையத்தில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்தனர்.




துப்பாக்கி சகிதம் வந்திருந்த அவர்கள் மின்னல் வேகத்தில் ஊழியர்களைத் தாக்கி பணப் பெட்டியைப் பறித்தனர். அவர்களை வங்கி ஊழியர்கள் தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு வங்கி ஊழியர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கையில் கிடைத்த பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு பைக்கில் வைத்துக் கொண்டு இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.


தூக்க முடியாமல் அந்தப் பெட்டியை வண்டியில் அவர்கள் வைத்துக் கொண்டு தப்பிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  சம்பவம் நடந்த இடத்திற்கு எதிரேதான் எஸ்பிஐ வங்கியின் தலைமை கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் துணிச்சலுடன், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இப்படி துணிகரமாக கொள்ளையர்கள் நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொள்ளையர்களை பொதுமக்கள் தரப்பில்  சிலர் தடுக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முடியாமல் போனது.


இரு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!

news

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?

news

புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?

news

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!

news

தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்

news

மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்