திருவனந்தபுரம் : கேரளாவில் தீவிர வறுமை இல்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் பிறப்பு தினமான 'கேரளப் பிறவி'யை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF, இந்த அறிவிப்பை "முழுப் பொய்யானது" என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்தது.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன், முதல்வர் விதி 300-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு "முழுப் பொய்யானது" என்றும், அவை விதிகளை "அவமதிப்பதாகவும்" கூறினார். "எனவே, நாங்கள் இதில் பங்கேற்க முடியாது, கூட்டத்தை முழுமையாகப் புறக்கணிக்கிறோம்" என்று சதிசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் "இது ஒரு மோசடி", "இது வெட்கக்கேடானது" என்று கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர், எதிர்க்கட்சியினர் "மோசடி" என்று குறிப்பிடுவது அவர்களின் சொந்த நடத்தையைப் பற்றித்தான் என்று கூறினார். "நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் சொல்கிறோம். நாங்கள் சொன்னதைச் செயல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எங்கள் பதில்" என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் இந்தியாவிலேயே முற்றிலுமாக வறுமை இல்லாத முதல் மாநிலம் என கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 01ம் தேதி முதல் கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலம் என அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது தற்போது கேரள அரசியலில் புதிய விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}