திருவனந்தபுரம் : கேரளாவில் தீவிர வறுமை இல்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் பிறப்பு தினமான 'கேரளப் பிறவி'யை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF, இந்த அறிவிப்பை "முழுப் பொய்யானது" என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்தது.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன், முதல்வர் விதி 300-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு "முழுப் பொய்யானது" என்றும், அவை விதிகளை "அவமதிப்பதாகவும்" கூறினார். "எனவே, நாங்கள் இதில் பங்கேற்க முடியாது, கூட்டத்தை முழுமையாகப் புறக்கணிக்கிறோம்" என்று சதிசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் "இது ஒரு மோசடி", "இது வெட்கக்கேடானது" என்று கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர், எதிர்க்கட்சியினர் "மோசடி" என்று குறிப்பிடுவது அவர்களின் சொந்த நடத்தையைப் பற்றித்தான் என்று கூறினார். "நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் சொல்கிறோம். நாங்கள் சொன்னதைச் செயல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எங்கள் பதில்" என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் இந்தியாவிலேயே முற்றிலுமாக வறுமை இல்லாத முதல் மாநிலம் என கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 01ம் தேதி முதல் கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலம் என அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது தற்போது கேரள அரசியலில் புதிய விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}