வறுமை இல்லாத முதல் மாநிலம்...கேரளா அரசு அறிவிப்பு...எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

Nov 01, 2025,10:39 AM IST

திருவனந்தபுரம் : கேரளாவில் தீவிர வறுமை இல்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் பிறப்பு தினமான 'கேரளப் பிறவி'யை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF, இந்த அறிவிப்பை "முழுப் பொய்யானது" என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்தது.


சட்டசபை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன், முதல்வர் விதி 300-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு "முழுப் பொய்யானது" என்றும், அவை விதிகளை "அவமதிப்பதாகவும்" கூறினார். "எனவே, நாங்கள் இதில் பங்கேற்க முடியாது, கூட்டத்தை முழுமையாகப் புறக்கணிக்கிறோம்" என்று சதிசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் "இது ஒரு மோசடி", "இது வெட்கக்கேடானது" என்று கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்.




இதற்கு பதிலளித்த முதல்வர், எதிர்க்கட்சியினர் "மோசடி" என்று குறிப்பிடுவது அவர்களின் சொந்த நடத்தையைப் பற்றித்தான் என்று கூறினார். "நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் சொல்கிறோம். நாங்கள் சொன்னதைச் செயல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எங்கள் பதில்" என்று அவர் தெரிவித்தார்.


இருந்தாலும் இந்தியாவிலேயே முற்றிலுமாக வறுமை இல்லாத முதல் மாநிலம் என கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 01ம் தேதி முதல் கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலம் என அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது தற்போது கேரள அரசியலில் புதிய விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

news

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு

news

வரலாற்றை அரசியலுக்காக தன் மனம் போன போக்கில் பேசுவது பிரதமருக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை!

news

துரோகம் செய்தால் இது தான் நிலைமை...இபிஎஸ் பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்