நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவு.. தமிழ்நாடு விரைகிறது கேரள அரசின் குழு

Dec 20, 2024,04:09 PM IST

நெல்லை: கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அம்மாநிலத்தில் இருந்து 7 பேர் கொண்ட குழு இன்று மாலை திருநெல்வேலி வருகிறது.


கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள்  அதிகரித்து வருகின்றன. இந்த குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. 




கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருநெல்வேலி ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 


நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு இன்று மாலைக்குள் நெல்லை வருகிறது. இந்த குழு நடுகல்லூர் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யும். அதன்பின்னர் திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயனையும் சந்தித்து குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம

news

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி

news

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!

news

தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

news

சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு

news

ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்