நெல்லை: கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அம்மாநிலத்தில் இருந்து 7 பேர் கொண்ட குழு இன்று மாலை திருநெல்வேலி வருகிறது.
கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருநெல்வேலி ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு இன்று மாலைக்குள் நெல்லை வருகிறது. இந்த குழு நடுகல்லூர் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யும். அதன்பின்னர் திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயனையும் சந்தித்து குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
{{comments.comment}}