கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. மரண தண்டனை கோரி சிபிஐ அப்பீல்.. விசாரணைக்கு ஏற்பு

Feb 07, 2025,04:53 PM IST

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது.  பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.




மறுபுறம் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவுப்படி, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து  வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று  சியால்டா சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 


குற்றவாளி சஞ்சய்ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது நீதிமன்றம். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்தாருக்கு மேற்கு வங்க அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று தெரிவித்தது. இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என மரண தண்டனை விதிக்கப்படாததற்கு என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இந்தத் தீர்ப்பு பெண் மருத்துவர் குடும்பத்தை கடுமையாக அதிருப்தி அடையச் செய்தது. கோர்ட் அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க மாட்டோம் என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறியிருந்தனர். 


மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியும் இந்தத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த  சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம், மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள் மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!

news

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. ரெடியா.. மார்ச் 26ல் தொடங்குகிறது.. ஐபிஎல் 2026!

news

The See-Saw of the Mind.. இன்றைய ஆங்கிலக் கவிதை!

news

டெல்லி பனிமூட்டத்தால் விபரீதம்.. அடுத்தடுத்து மோதிக் கொண்டு தீப்பிடித்த வாகனங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 16, 2025... இன்று நினைத்த காரியங்கள் கைகூடும்

news

மார்கழி 1.. மாணிக்கவாசகரின் திருவெம்பாவை.. ஆதியும் அந்தமும் இல்லா!

news

மார்கழி 1.. கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை.. பாசுரம் 1.. மார்கழித் திங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்