மகளிர் ஆணைய உறுப்பினரானதால்.. லோக்சபா தேர்தலில் குஷ்பு போட்டியிட முடியாது!

Feb 28, 2023,09:32 AM IST
சென்னை: பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகியுள்ளார். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன.



நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கருணாநிதி தலைவராக இருந்தபோது அவர் திமுகவில் முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் முன்னிலை பெற்றார். ஆனால் கட்சியில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கத் தொடங்கியதும் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். 

இதையடுத்து அப்செட் ஆன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைவராக இருந்தபோது குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவரும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் அதன் பின்னர் இளங்கோவனின் தலைவர் பதவி பறிக்கப்பட்டதும் குஷ்புவும் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார்.




இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார் குஷ்பு. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் தரப்பட்டது. ஆனால் அத்தொகுதியில் திமுகவிடம் தோல்வியுற்றார் குஷ்பு. உண்மையில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியைத்தான் கேட்டிருந்தார்.  ஆனால் அந்தத் தொகுதியைத் தராமல் ஆயிரம் விளக்கு தொகுதியை பாஜக ஒதுக்கியது சலசலப்ப ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  2024 லோக்சபா தேர்தலில் குஷ்பு நிச்சயம் போட்டியிடுவார். குறிப்பாக கொங்கு மண்டலத் தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடலாம் என்ற பேச்சு சமீப நாட்களாக அடிபட்டு வந்தது. சட்டசபைத் தேர்தலில் கைநழுவிப் போன வெற்றியை, லோக்சபா தேர்தலில்  குஷ்பு பெறுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது  பாஜக மத்திய அரசு. 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியின் ஆயுள் காலம் 3 வருடமாகும். எனவே  குஷ்புவால் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.  இது குஷ்புவின் ஆதரவாளர்களை அப்செட்டாக்கியுள்ளது. குஷ்பு எம்.பியாகி டெல்லி செல்வார்.. வாய்ப்பிருந்தால் மத்திய அமைச்சராகவும் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள், இப்போது பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்