மகளிர் ஆணைய உறுப்பினரானதால்.. லோக்சபா தேர்தலில் குஷ்பு போட்டியிட முடியாது!

Feb 28, 2023,09:32 AM IST
சென்னை: பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகியுள்ளார். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன.



நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கருணாநிதி தலைவராக இருந்தபோது அவர் திமுகவில் முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் முன்னிலை பெற்றார். ஆனால் கட்சியில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கத் தொடங்கியதும் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். 

இதையடுத்து அப்செட் ஆன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைவராக இருந்தபோது குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவரும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் அதன் பின்னர் இளங்கோவனின் தலைவர் பதவி பறிக்கப்பட்டதும் குஷ்புவும் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார்.




இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார் குஷ்பு. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் தரப்பட்டது. ஆனால் அத்தொகுதியில் திமுகவிடம் தோல்வியுற்றார் குஷ்பு. உண்மையில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியைத்தான் கேட்டிருந்தார்.  ஆனால் அந்தத் தொகுதியைத் தராமல் ஆயிரம் விளக்கு தொகுதியை பாஜக ஒதுக்கியது சலசலப்ப ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  2024 லோக்சபா தேர்தலில் குஷ்பு நிச்சயம் போட்டியிடுவார். குறிப்பாக கொங்கு மண்டலத் தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடலாம் என்ற பேச்சு சமீப நாட்களாக அடிபட்டு வந்தது. சட்டசபைத் தேர்தலில் கைநழுவிப் போன வெற்றியை, லோக்சபா தேர்தலில்  குஷ்பு பெறுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது  பாஜக மத்திய அரசு. 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியின் ஆயுள் காலம் 3 வருடமாகும். எனவே  குஷ்புவால் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.  இது குஷ்புவின் ஆதரவாளர்களை அப்செட்டாக்கியுள்ளது. குஷ்பு எம்.பியாகி டெல்லி செல்வார்.. வாய்ப்பிருந்தால் மத்திய அமைச்சராகவும் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள், இப்போது பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்