காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?

Jan 17, 2026,11:04 AM IST

- ப.நா. ராஜேஷ் கண்ணா


காணும் பொங்கல் என்பது தமிழ் பொங்கல் பண்டிகையின் நான்காவது மற்றும் இறுதி நாளாகும். இது பொதுவாக ஜனவரி 16 அல்லது 17 அன்று தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது."காணும்" என்ற சொல் "காணுதல்" அல்லது "பார்த்தல்" என்று பொருள்படும்.


காணும் பொங்கல் என்பது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்களை காண்பது, அவர்களிடம் ஆசி பெறுவதற்கான நாள். இது கன்னி பொங்கல் அல்லது கனுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது, குறிப்பாக அதன்போது திருமணமாகாத பெண்கள் தங்கள் நலனுக்காக வழிபாடு செய்கின்றனர்.


இந்நாள் குடும்பங்கள் பிக்னிக், ஆற்றங்கரை சுற்றுலா, கோயில் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கின்றனர். சகோதரிகள் சகோதரர்களின் நலனுக்காக கணுப்பிடி (நோன்பு) வைப்பதும், விளையாட்டுகள் போன்ற உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்றவையும் நடைபெறும்.




தமிழ் கலாச்சாரத்தில் உறவு-உறவு இணைப்புகளை வலுப்படுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது பண்டைய தமிழ் சமூகத்தில் அறுவடைக்குப் பின் குடும்பங்கள் ஒன்றுகூடி பெரியவர்களிடம் ஆசி பெறுவதற்கும், நெடுநாள் காணாத உறவினர்களை சந்திப்பதற்கும் தொடங்கியது.


பொங்கல் விழா சங்க காலத்திலிருந்தே (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெறுமனே வீட்டிலேயே அமர்ந்திருக்கலாம், ஜாலியாக வெளியில் செல்லுங்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து மனசு விட்டு நாலு வார்த்தை பேசி விட்டு வாருங்கள்.. உற்சாகமும் கூடும், உறவும், நட்பும் பலப்படும்.


(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்