நித்தியக் கல்யாணி என்றால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு பூவின் பெயராக தான் தெரியும்.. பெயர் என்னவோ புதுசுதான்.. ஆனா் பூ பழசு தான். இந்த செடியின் மகத்துவம் தெரியாமலேயே பலர் தங்கள் வீட்டில் வைத்து அழகுக்காக வளர்த்து வருகின்றனர். இச்செடியின் இலைகள் கசப்பாக இருப்பதனால் இதனை ஆடு மாடுகள் உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். இதன் பூ, இலைகள், தண்டு மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கின்றது.
குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு இந்த நித்தியகல்யாணி கை கொடுக்கும் மருந்தாக பயன்படுகிறது. எப்பேர்பட்ட சர்க்கரை வியாதியாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் இந்த நித்தியகல்யாணிஜூஸைக் குடித்தால் போதும் சூப்பராக குணமாகும்.

நித்தியகல்யாணி செடியின் பூவைப் பறித்து அதனை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் அதனை ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். நான்கு நாட்கள் இதை சாப்பிடுவது நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இந்த பூ கட்டுக்குள் கொண்டு வருகிறது. குறிப்பாக நாள்பட்ட சர்க்கரை காரணமாக மோசமான பின்விளைவுகளை எதிர் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை பெருக்குகிறது.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவு மிக, மிக அதிகமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் நம் இதயம் பலமாகிறது. இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லைங்க, இரத்த அழுத்தம், மனரீதியான நோய்கள், மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் போன்ற அனைத்திற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமா.. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இச்செடி பயன்படுத்தப்படுகிறதாம். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக இது பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை அளவு குறைந்து நோய் கட்டுக்குள் வரும்.
Disclaimer: நாட்டு மருந்து வைத்தியம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}