நித்தியக் கல்யாணி என்றால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு பூவின் பெயராக தான் தெரியும்.. பெயர் என்னவோ புதுசுதான்.. ஆனா் பூ பழசு தான். இந்த செடியின் மகத்துவம் தெரியாமலேயே பலர் தங்கள் வீட்டில் வைத்து அழகுக்காக வளர்த்து வருகின்றனர். இச்செடியின் இலைகள் கசப்பாக இருப்பதனால் இதனை ஆடு மாடுகள் உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். இதன் பூ, இலைகள், தண்டு மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கின்றது.
குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு இந்த நித்தியகல்யாணி கை கொடுக்கும் மருந்தாக பயன்படுகிறது. எப்பேர்பட்ட சர்க்கரை வியாதியாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் இந்த நித்தியகல்யாணிஜூஸைக் குடித்தால் போதும் சூப்பராக குணமாகும்.

நித்தியகல்யாணி செடியின் பூவைப் பறித்து அதனை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் அதனை ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். நான்கு நாட்கள் இதை சாப்பிடுவது நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இந்த பூ கட்டுக்குள் கொண்டு வருகிறது. குறிப்பாக நாள்பட்ட சர்க்கரை காரணமாக மோசமான பின்விளைவுகளை எதிர் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை பெருக்குகிறது.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவு மிக, மிக அதிகமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் நம் இதயம் பலமாகிறது. இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லைங்க, இரத்த அழுத்தம், மனரீதியான நோய்கள், மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் போன்ற அனைத்திற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமா.. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இச்செடி பயன்படுத்தப்படுகிறதாம். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக இது பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை அளவு குறைந்து நோய் கட்டுக்குள் வரும்.
Disclaimer: நாட்டு மருந்து வைத்தியம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}