உங்களுக்கு சர்க்கரை வியாதியா... நோ பிராபளம்.. நித்தியக் கல்யாணி இருந்தா போதும்!

Sep 27, 2024,05:02 PM IST

நித்தியக் கல்யாணி என்றால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு பூவின் பெயராக தான் தெரியும்.. பெயர் என்னவோ புதுசுதான்.. ஆனா்  பூ பழசு தான். இந்த செடியின் மகத்துவம் தெரியாமலேயே பலர் தங்கள் வீட்டில் வைத்து அழகுக்காக வளர்த்து வருகின்றனர். இச்செடியின் இலைகள் கசப்பாக இருப்பதனால் இதனை ஆடு மாடுகள் உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். இதன் பூ, இலைகள், தண்டு மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கின்றது.


குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு இந்த நித்தியகல்யாணி கை கொடுக்கும் மருந்தாக பயன்படுகிறது. எப்பேர்பட்ட சர்க்கரை வியாதியாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் இந்த நித்தியகல்யாணிஜூஸைக் குடித்தால் போதும் சூப்பராக குணமாகும். 




நித்தியகல்யாணி செடியின் பூவைப் பறித்து அதனை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் அதனை ஆற வைத்து  குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். நான்கு நாட்கள் இதை சாப்பிடுவது நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இந்த பூ கட்டுக்குள் கொண்டு வருகிறது. குறிப்பாக நாள்பட்ட சர்க்கரை காரணமாக மோசமான பின்விளைவுகளை எதிர் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடலில்  இன்சுலின் உற்பத்தியை பெருக்குகிறது.


பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவு மிக, மிக அதிகமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம்  உடலில் உள்ள கெட்ட  கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் நம் இதயம் பலமாகிறது. இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லைங்க, இரத்த அழுத்தம், மனரீதியான நோய்கள், மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் போன்ற அனைத்திற்கு இது மருந்தாக பயன்படுகிறது.


அதுமட்டுமா.. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இச்செடி பயன்படுத்தப்படுகிறதாம். சித்த மருத்துவத்தில் நீரிழிவு  நோய்க்கு மருந்தாக இது பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை அளவு குறைந்து நோய் கட்டுக்குள் வரும்.


Disclaimer: நாட்டு மருந்து வைத்தியம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

.துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்