சென்னை : எதை செய்வதாக இருந்தாலும் அதற்கென்று சரியான நேரம் என்று ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் செய்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, வாக்கிங் செல்வது என அனைத்தையுமே அதற்கான சரியான நேரத்தில் செய்தால் மட்டும் அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். அப்படி தான் உடல் எடை சரி பார்ப்பதும் கூட.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டு, அதை சரியான அளவில் வைத்திருப்பது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் எது என்று தான் பலருக்கும் தெரிவது கிடையாது. இன்னும் சிலர் எப்போது எல்லாம் தோன்றிதோ அப்போது எல்லாம் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் உடல் எடையை எப்போது செக் செய்தால் சரியாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர்களின் அறிவுரையின் படி, காலை நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் ஆகும். காலையில் எழுந்ததும் உங்களின் குடல் தன்னுடைய வேலையை துவங்குவதற்கு முன்பான நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம். அதாவது, எதுவும் சாப்பிடுதற்கோ அல்லது குடிப்பதற்கோ முன்பு பார்த்தது தான் சரியாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பார்க்கும் போது தான் உங்களின் சரியான உடல் எடையை கணக்கிட முடியும்.
உணவு, தண்ணீர் ஏதும் சாப்பிடாமல் இருக்கும் போது உங்கள் உடல் எடையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரே சீராக, துல்லியமாக இருக்கும். முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்துக் கொண்டே, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் உடல் எடையை சரிபார்த்துக் கொண்டே வந்தால் உடல் எடையின் அளவு குறித்த சரியான அளவீட்டை பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}