சென்னை : எதை செய்வதாக இருந்தாலும் அதற்கென்று சரியான நேரம் என்று ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் செய்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, வாக்கிங் செல்வது என அனைத்தையுமே அதற்கான சரியான நேரத்தில் செய்தால் மட்டும் அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். அப்படி தான் உடல் எடை சரி பார்ப்பதும் கூட.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டு, அதை சரியான அளவில் வைத்திருப்பது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் எது என்று தான் பலருக்கும் தெரிவது கிடையாது. இன்னும் சிலர் எப்போது எல்லாம் தோன்றிதோ அப்போது எல்லாம் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் உடல் எடையை எப்போது செக் செய்தால் சரியாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர்களின் அறிவுரையின் படி, காலை நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் ஆகும். காலையில் எழுந்ததும் உங்களின் குடல் தன்னுடைய வேலையை துவங்குவதற்கு முன்பான நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம். அதாவது, எதுவும் சாப்பிடுதற்கோ அல்லது குடிப்பதற்கோ முன்பு பார்த்தது தான் சரியாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பார்க்கும் போது தான் உங்களின் சரியான உடல் எடையை கணக்கிட முடியும்.
உணவு, தண்ணீர் ஏதும் சாப்பிடாமல் இருக்கும் போது உங்கள் உடல் எடையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரே சீராக, துல்லியமாக இருக்கும். முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்துக் கொண்டே, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் உடல் எடையை சரிபார்த்துக் கொண்டே வந்தால் உடல் எடையின் அளவு குறித்த சரியான அளவீட்டை பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}