சென்னை: சென்னையில் நாளையும் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வட தமிழ்நாட்டில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை பனிப்பொழிவு குறைந்தது பிற்பகலுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும் இருக்கக் கூடும்.

மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இன்றும், நாளையும் வறண்ட வானிலை யே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிப்பொழிவு காணப்படும்.
16 ஆம் தேதி
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
17.2.2025 முதல் 20.2.2025 வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
{{comments.comment}}