சென்னை:லோக்சபா தேர்தல் தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை 6 மணிக்கு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. இதற்கான எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். மறு பக்கம் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம், கொங்கு தேசிய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சிபிஎம்,விசிக மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு ஏற்கனவே தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவுகள் இறுதியானது. இது தவிர மதிமுக வுக்கு ஒரு தொகுதி ஒப்பந்தமாகி கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வந்ததாகவும்,திமுக இதனை ஏற்க மறுத்ததால் தொகுதி உடன்பாடில் இழுபறி நீடித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு உடன்பாடு இறுதியாகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மூத்த நிர்வாகி கே.சி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}