சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி உத்தேசமாக 21 தொகுதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை தற்போது காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளன. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக, முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்து இன்று பேசியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழுவும், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டன. அவை - திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகியவை. இதில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதற்குக் காரணம், தென் மாநிலங்களில் தங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக சீட்களை அள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் மேலும் 12 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கான உத்தேசப் பட்டியலையும் காங்கிரஸ் குழு, திமுக குழுவிடம் தரவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (தனி), தென் சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகியவையே அவை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சி மறுப்பு

இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுக்க விரும்புகிறோம் என்று அக்கட்சி சார்பில் ஆர். கோபண்ணா மறுப்பு வெளியிட்டுள்ளார்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}