சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி உத்தேசமாக 21 தொகுதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை தற்போது காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளன. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக, முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்து இன்று பேசியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழுவும், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டன. அவை - திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகியவை. இதில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதற்குக் காரணம், தென் மாநிலங்களில் தங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக சீட்களை அள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் மேலும் 12 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கான உத்தேசப் பட்டியலையும் காங்கிரஸ் குழு, திமுக குழுவிடம் தரவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (தனி), தென் சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகியவையே அவை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சி மறுப்பு
இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுக்க விரும்புகிறோம் என்று அக்கட்சி சார்பில் ஆர். கோபண்ணா மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}