சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
லவ் டுடே புகழ் ரங்கநாதன் நடிக்க, லியோ பட தயாரிப்பாளர் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கீர்த்தி ஷெட்டி. இன்றைய இளைஞர்களின் பிடித்தமான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.பல முக்கிய பிரபலங்கள் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெளிவரும் என்று ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர். லியோ படத் தயாரிப்பாளரான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் இதை தயாரிக்கிறார். சீமான், எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மிடில் கிளாஸ் மாதவன், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், சட்டப்படி குற்றம், மிக மிக அவசரம், தவம் என பல படங்களில் நடித்தவர் சீமான். நாம் தமிழர் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தீவிர அரசியல்வாதியுமான சீமான் அரசியலுக்கு சென்ற பிறகு ஓரிரு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான் நடிப்பது உறுதியாகிய நிலையில், என்ன வேடத்தில் நடிப்பாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்திருந்த நிலையில், பிரதீப்பிற்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பா மகன் இருவரிடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளதாகவும், விவசாயம், இயற்கை என பழமை மாறாத அப்பா கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றதாகவும். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}