சென்னை: சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் படம் இருக்கும் என நடிகை மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களுடன், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ் சினிமாவில்
ரொமாண்டிக் திரைப்படமான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாமாகி பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் பா. பாண்டி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அதேபோல் லியோ படத்தில் விஜயின் தங்கையாக ஆக்ஷன் நாயகியாக கலக்கி இருந்தார். அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து 'ஜாலி ஓ ஜிம்கானா' திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர்களுடன் யோகி பாபு, அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் என மிகப்பெரிய காமெடி பட்டாளங்களே நடித்துள்ளனர்.
காமெடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். ட்ரான்சிண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் சார்பில் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் இப்படத்தை தயாரித்து உள்ளனர். சமீபத்தில் பாடகி ஆண்ட்ரியா குரலில் போலீஸ்காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் பாடிய ஊசி ரோசி என்ற இரண்டாவது பாடல் வெளியானது.

அதேபோல் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியானது. இதில் இறந்து போன பிரபுதேவாவை ரயிலில் ஏற்ற முயற்சிக்கும் போது டிடிஆர் வந்து விடுகிறார். அப்போது என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்த எதார்த்தமான காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டினா கூட்டணியில் உருவாகியுள்ள ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இப்படம் குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானது. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் சார் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
எனக்கும் மட்டுமல்ல நடிகர்கள் அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது. ஜாலி ஓ ஜிம்கானா திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும். டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும் அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
இந்தியாவுக்குப் புதிய சிக்கலா? 500% வரி விதிப்பு மசோதாவிற்கு டிரம்ப் ஆதரவு
சாலையோர பூக்கள்....!
கட்சியிலேயே இல்லாத அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும்?...பாமக ராமதாஸ் அதிரடி
ஓபிஎஸ்.,க்கு அதிமுகவிலும் இடமில்லை... கூட்டணியிலும் இடமில்லை... இபிஎஸ் திட்டவட்டம்
இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!
ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Extra-curricular activities.. மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிப்போம்!
{{comments.comment}}