சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. பதவிக்கு ஆபத்து?

Dec 19, 2023,09:13 PM IST

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.


திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011ம் ஆண்டு  உயர் கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.


இந்த விடுதலை வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.




இரு தரப்பு வாதங்களும் முடிந்த  நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியதால், வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், தண்டணை  குறித்து அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி காலை 10.30க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பால் அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும்  பறி போய் விடும். அவரால் 6 வருடத்திற்கு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்