சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. பதவிக்கு ஆபத்து?

Dec 19, 2023,09:13 PM IST

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.


திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011ம் ஆண்டு  உயர் கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.


இந்த விடுதலை வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.




இரு தரப்பு வாதங்களும் முடிந்த  நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியதால், வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், தண்டணை  குறித்து அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி காலை 10.30க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பால் அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும்  பறி போய் விடும். அவரால் 6 வருடத்திற்கு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்