சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011ம் ஆண்டு உயர் கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.
இந்த விடுதலை வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு உள்ளது என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியதால், வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், தண்டணை குறித்து அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி காலை 10.30க்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போய் விடும். அவரால் 6 வருடத்திற்கு தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}