மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

Nov 19, 2025,01:04 PM IST

- க. சுமதி


சென்னை: தமிழ்நாட்டின் இரு பெரும் முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த மெட்ரோ திட்டங்கள் வருமா வராதா என்ற பெருத்த சந்தேகம் கிளம்பியுள்ளது. இரு நகரங்களின் மக்கள் மத்தியிலும் இது பெரும் பேசு பொருளாகியுள்ளது.


இரு நகரங்களுக்கும் தமிழ்நாடு அரசு திட்டமிட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதேசமயம், இந்தத் திட்டத்திற்குப் பதில் மாற்றுத் திட்டத்தைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசு பதில் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திட்டம் நிராகரிக்கப்படவில்லை, மாறாக, மாநில அரசின் தாமதமே இந்தத் திட்டத்திற்கு தற்போது அனுமதி கிடைக்காமல் போகக் காரணம் என்று பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது.




இன்றைய காலகட்டத்தில் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிற்பதற்கு மெட்ரோ ரயில் சேவை என்பது மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தாவில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்து வந்தது. பின்னர்தான் படிப்படியாக மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் என அது பரவியது. இப்போது 2ம் நிலை நகரங்களுக்கும் மெட்ரோ வர ஆரம்பித்து விட்டது.


சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வந்த பிறகு நகரின் போக்குவரத்து பெரும் எழுச்சியைச் சந்தித்தது. இதன் அடிப்படையில் கோவை ,மதுரை  போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது மிகவும் அவசியமாக கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் தமிழக அரசானது கோவை மெட்ரோ ரயில்  வழித்தடமாக 34 கிலோ மீட்டருக்கு ரூ. 10,740 கோடி செலவிலும், மதுரை மெட்ரோ ரயில் மெட்ரோ வழித்தடமாக 32 கிலோமீட்டருக்கு ரூ. 11,368 கோடி  கோடி செலவிலும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. 


இந்த திட்ட அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் இந்த  மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்து மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. அதாவது மெட்ரோ ரயில் சேவைக்கு 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மெட்ரோ ரயில்  திட்டத்திற்கான செலவு மிக அதிகம். தற்போதைக்கு கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு விரிவான  பேருந்து போக்குவரத்து திட்டமே போதுமானது எனவும்  விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மத்திய அரசைக்  கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், மக்கள் மத்தியிலும் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நீண்ட காலமாக மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நிறையக் கனவுகளுடன் இருந்தோம். பல திட்டங்களையும் தீட்டியிருந்தோம். ஆனால் மத்திய அரசின் முடிவு, பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எங்கள் கனவுகளில் மண்ணை அள்ளி போட்டுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் தொகையை காரணம் காட்டி இந்த ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், வடமாநிலங்களான உத்தர பிரதேசத்தில்- ஆக்ரா, மத்திய பிரதேசத்தில்- போபால், பீகார் மாநிலத்தில் பாட்னா முதலான நகரங்களுக்கு மெட்ரோ சேவைக்கான அனுமதி அளித்துள்ளது. அங்கு 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

International Men's day: பெண்கள் நாட்டின் கண்கள்.. ஆண்கள் வீட்டின் தூண்கள்!

news

குடும்பங்களைத் தூணாக தாங்கும் ஆண்கள்!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. சர்வதேச ஆண்கள் தினம்..!

news

அதிரடி சரவெடியென உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??

அதிகம் பார்க்கும் செய்திகள்