மதுரை: பல ஆண்டுகால போராட்டம், மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட தமிழ்கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரைமறைவு பணிகள் துவங்கிவிட்டன. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் பெரும்வரலாற்று ஆவணங்களாகிய கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து மைப்படி எடுக்கப்பட்டன. அந்த மைப்படிகள் 1961ஆம் ஆண்டுவாக்கில் மைசூருக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பு இன்றியும், தமிழ்நாட்டு மாணவர்கள் ஆய்வுக்குகூட அணுகமுடியாத நிலையிலும் இருந்தன. எனவே, அவற்றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்தோம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதியரசாக இருந்த கிருபாகரன் அமர்வு மைசூரில் சிதைந்துக்கொண்டிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து பாதுகாக்குமாறு தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து 2022 நவம்பர் மாதத்தில் மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளில் பாதியளவுக்கும் குறைவான படிகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன.
தற்பொழுது, “பராமரிக்க முடியாத தட்பவெப்ப சூழ்நிலை, கட்டிடம் இன்மை” என்று காரணங் கூறி அவற்றை மீண்டும் மைசூருக்கே மாற்றுவதற்கான முயற்சி திரைமறைவில் தொடங்கிவிட்டது. இதை தடுக்கத் தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போகும்.
எனவே இந்தப் பிரதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கேட்டுப்பெற தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இன்றுவரை மின்னுருவாக்கம் செய்யப்படாமல் இருக்கும் இந்தப் பிரதிகளை மின்னுருவாக்கம் செய்யும் பொறுப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.
சரஸ்வதி நாகரிக ஆய்வுக்கு எத்தனை கோடி ரூபாயையும் ஒதுக்கத் தயங்காத ஒன்றிய அரசு, தமிழ்க் கல்வெட்டுகளைப் பாதுகாக்க நல்ல கட்டிடங்களை உருவாக்கவோ, மின்னுருவாக்கவோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.
நமது சான்றாவணங்களை நமது வரலாற்றுக்கும் தத்துவத்துக்கும் எதிரானவர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்புவது அறியாமை. எனவே, கல்வெட்டுகள் என்னும் நமது காலப்பெட்டகத்தை நாமே பாதுகாப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}