மதுரை: மதுரையில் வருகிற மே 12ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. சித்திரைத் திருவிழா என்பது சைவ மற்றும் வைணவ மதங்களின் கூட்டுத் திருவிழா என்பதுதான் விசேஷமானது. மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவுடன், அழகர் கோவில் கள்ளளழகர் விழாவையும் இணைத்துக் கொண்டாடுகிறார்கள்.
மதுரையின் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைப் பார்க்க அண்ணனான அழகர் புறப்பட்டு வருவதாகவும், அவர் வருவதற்குள் கல்யாணம் நடந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் அப்படியே ஆற்றங்கரையோரமாகவே அழகர் மலைக்கு அவர் திரும்பியதாகவும் ஐதீகம். இந்த இரண்டையும் இணைத்துதான் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அன்று லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் கூடுவார்கள் என்பதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
{{comments.comment}}