மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை தொடங்கிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 4,139 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏதுவாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் 2-வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரம் படி 12.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல் மும்பை ராஜ் பவனில் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}