மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்.. இரு மாநிலங்களிலும்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

Nov 20, 2024,10:34 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை  தொடங்கிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.


288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 4,139 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏதுவாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு   ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.




அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.


 இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ‌ மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் 2-வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரம் படி 12.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.


மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி,  மகள் சாரா  ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல் மும்பை ராஜ் பவனில் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை செலுத்தினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்