மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை தொடங்கிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 4,139 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏதுவாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் 2-வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரம் படி 12.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல் மும்பை ராஜ் பவனில் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}