மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை தொடங்கிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 4,139 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏதுவாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் ஜார்க்கண்ட் 2-வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரம் படி 12.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல் மும்பை ராஜ் பவனில் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}