டில்லி : மத்திய அரசு கொண்டு வர உள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டமான UPS ல் U என்ற எழுத்து எதை குறிக்கிறது என்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புது அர்த்தம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. குறைந்த பட்ச பென்ஷன், குடும்ப பென்ஷன், உறுதியான பென்ஷன் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வர உள்ள UPS (Unified Pension scheme) குறித்து தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, UPS என்பதில் U என்பதற்கு ஒரே மாதிரியான என்பது அர்த்தம் கிடையாது. இது மோடி அரசின் U-turn ஐ குறிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பிரதமரின் அதிகாரத் திமிரை விட மக்கள் அதிகாரம் மேலோங்கியுள்ளது. மூலதன ஆதாயம்/குறியீடு, வக்ஃப் மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்புதல், ஒளிபரப்பு மசோதாவை திரும்பப் பெறுதல், பக்கவாட்டு நுழைவு திரும்பப் பெறுதல் ஆகியவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இவற்றை நாம் உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. இந்த அதிகார அரசிடம் இருந்து 140 கோடி இந்தியர்களையும் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, எப்போது எல்லாம் தெலுங்கானாவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதோ அப்போது எல்லாம் நிதி பற்றாக்குறை தான். தினமும் காலையில் வந்து பொய்களை சொல்வதே காங்கிரசின் வேலையாக உள்ளது. அதை தவிர அவர்கள் வேறு ஒன்றும் செய்வது கிடையாது. பொது பென்ஷன் திட்டத்திற்கான பணிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் இந்த திட்டத்தை இறுதி செய்வதற்கு முன் 100 க்கும் அதிகமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளார்.
தெலுங்கானா, கர்நாடகாவில் நிலவும் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு ஆலோசித்த பிறகே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தாங்கள் ஆட்சியில் இருந்த போது இருந்த நிலையை மறந்து விட்டு காங்கிரஸ் மிக அதீதமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}