ரேவா: 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேவா மாவட்டம் கட்காரி கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பாண்டே என்பவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு அச்சுறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் அதே சிறுமியை கடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலைக்கு சென்று திரும்பிய அதே சிறுமியை அந்த இளைஞர் கடத்தியுள்ளார். ஒரு மாதமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 2ம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டே என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}