ரேவா: 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேவா மாவட்டம் கட்காரி கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பாண்டே என்பவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு அச்சுறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் அதே சிறுமியை கடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலைக்கு சென்று திரும்பிய அதே சிறுமியை அந்த இளைஞர் கடத்தியுள்ளார். ஒரு மாதமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 2ம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டே என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}