கொடுமை.. பலாத்காரம் செய்த சிறுமியை.. ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் நாசப்படுத்திய இளைஞர்!

Sep 10, 2024,05:04 PM IST

ரேவா:   17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரேவா மாவட்டம்  கட்காரி கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பாண்டே என்பவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு அச்சுறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார்.




இந்நிலையில், கடந்த வாரம்  ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் அதே சிறுமியை கடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலைக்கு சென்று திரும்பிய அதே சிறுமியை அந்த இளைஞர் கடத்தியுள்ளார். ஒரு மாதமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 2ம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.


குற்றம் சாட்டப்பட்ட பாண்டே என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!

news

ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

அதிகம் பார்க்கும் செய்திகள்