"அடப்பாவிகளா.. நான் ஏன் தலைமறைவு ஆகணும்".. ஆடியோ வெளியிட்டு வாய்ஸ் கொடுத்த மன்சூர் அலிகான்!

Nov 23, 2023,12:51 PM IST

- சங்கமித்திரை


சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதை மறுத்து தனது பிஆர்ஓ மூலம் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார் அவர்.


திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்து இப்போது வழக்கு, விசாரணை வரை வந்துள்ளது. இன்று அவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொண்டைவலி இறுமல் என்று கூறி நாளைக்கு வருவதாக சொல்லி அவர் காவல் நிலையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.


இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தலைமுறைவாகி விட்டதாக  சில செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்து அவர் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலமாக ஒரு ஆடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.




அதில் ஆன்டிசிபேட்டரி பெயில் என்பது நடைமுறை. முதலில் நுங்கம்பாக்கத்தில் வழக்கு பதிவு என்றார்கள். பிறகு ஆயிரம் விளக்கு என்று வந்தது. இதனிடையில் குற்றவியல் தடுப்புச் சட்டம் 41 ஏ படி காவல் அதிகாரி அம்மையார் அவர்கள் எனக்கு ஆயிரம்விளக்கிருந்து கடிதம் அனுப்பி இருந்தார்கள். இன்று ஆஜராக இருந்தது. ஆனால் தொண்டை வலி இருமல் என்று கூறி நான் பிறகு வருவதாக கூறி கடிதம் போட்டு விட்டேன்.


இந்த நிலையில் சிலர் எனக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மனுஷன், எத்தனை போன் தான் அட்டென்ட் பண்ணுவது. அதனால் சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். ஆனால் சுவிட்ச் ஆப் ஆனதை வைத்து நான் தலைமறைவாகி விட்டேன் என்று சந்தோஷப்படுகிறார்கள். அடப்பாவிகளா பூட்டுன ஆபீசை போட்டோ எடுத்து போட்டு மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக சந்தோஷ செய்தி பரப்புறீரீங்களே. தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கு, எப்படியெல்லாம் திசை திருப்புறாங்க. நான் எதுக்குப்பா தலைமறைவாகனும். நான் என்ன நிஜமாவே யாரையாவது கற்பழிச்சிட்டேனா இல்லை கொலை பண்ணிட்டேனை. ஏம்ப்பா இப்படி ஆனந்தப் புளகாங்கிதம் அடையறீங்க என்று அதில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்