திருவெம்பாவை பாசுரம் 03 :
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்
பொருள் :
முத்துப் போன்ற வெள்ளை நிற பற்களைக் காட்டி அழகாக சிரிக்கும் பெண்ணே, சிவ பெருமான் மீதான தீராத அன்பும், பக்தியும் வைத்துள்ளதாக வாய் இனிக்க பேசுவாயே. ஆனால் அந்த சிவனை தரிசிக்க அழைக்க வந்தால் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. வந்து உன்னுடைய வீட்டின் கதவை திற என்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண், நீங்கள் பல காலமாக ஈசன் மீது பக்தி செய்த வருகிறீர்கள். நான் பக்தி செய்வதற்கு புதியவள் என்பதால் சற்று கண் அயர்ந்து தூங்கி விட்டேன். அந்த தவறை மன்னிக்காமல் இப்படி கேலி பேசுவது சரியா? என கேட்கிறாள். அதற்கு வெளியில் இருக்கும் தோழிகள், நீ சிவன் மீது எத்தனை அன்பு வைத்துள்ளாய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். நமக்குள் வீணாக பேசிக் கொண்டிருக்காமல் இது நம் சிவனை போற்றி துதிக்கின்ற நேரம் என்கிறாள்.
விளக்கம் :
பக்தியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எதுவும் கிடையாது. பக்தி செய்வதில் தன்னுடைய பக்தி தான் சிறந்தது என தற்பெருமை பேசி காலத்தை வீணடிக்காமல் இறைவனை வணங்கி, அனைவரும் அவரின் அருளை பெற வேண்டும் என மாணிக்கவாசகர் அழைக்கிறார். பக்தி என்பது வெளித் தோற்றத்தில், பகட்டில் இல்லை. அது விளம்பரத்திற்குரியது அல்ல. வெறும் வார்த்தையால் இறைவன் மீது நான் அவ்வளவு அன்பு வைத்துள்ளேன், இவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என சொல்வது வீண் செயல் என்றும் சொல்கிறார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}