மயங்கிக் கிடந்த  மனைவி.. கலங்கிப் போன கணவன்.. கை கொடுத்து உதவிய விஜயபாஸ்கர்

Jul 25, 2023,01:10 PM IST
- சகாயதேவி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையில் மயங்கிக் கிடந்த மனைவியை தாங்கிப் பிடித்தபடி உதவிக்காக தவித்து நின்ற கூலித் தொழிலாளியைக் கண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது காரை நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்து அனுப்பி வைத்த செயல் பலரையும் நெகிழ வைத்தது.

கொரோனா காலத்தின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். அவரது செயல்பாடுகள் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில் அவர் செய்த ஒரு உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது.



ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து காரில் போய்க் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போது விராலிமலை அருகே மாத்தூ���் என்ற இடத்தில் கார் போனபோது சாலையோரம் ஒரு நபர் மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை மடியில் கிடத்தியபடி தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து காரை நிறுத்தக் கூறினார்.

காரை விட்டு இறங்கி அந்த நபரை நெருங்கி யார் என்னாச்சு என்று விசாரித்தபோது இருவரும் கூலித் தொழிலாளர்கள், கணவன் மனைவி என்று தெரிய வந்தது. திடீரென மனைவி  மயங்கி விழுந்து விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தார். பின்னர் காலை தேய்த்து முதலுதவி செய்தார். அதன் பின்னர் அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அந்த இருவரும்  அங்கிருந்து பத்திரமாக கிளம்பிச் சென்றனர். கூலி வேலைக்காக திருச்சி போயிருந்த அவர்கள் வரும் வழியில் இப்படி ஆகி விட்டது தெரிய வந்தது. அமைச்சரின் செயல்பாடு அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்