சென்னை: எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், எங்களுடைய கழக இளையரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அறிவிப்பை வெளியிடும் போது, அவர் கேட்டுக்கொண்டது, விளம்பர பாதாகைகள் வேண்டாம். ஆடம்பரங்கள் வேண்டாம், ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, அதே போல கருணை இல்லங்களுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு உதவித் தொகை ஆகிய உதவிகளைச் செய்ய அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில், நடந்த திருமணம் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று 21 ஜோடிகளுக்கு, வயிறார அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதை எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ள முடியும். பார்ப்பவர் கண்ணிலே கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது எல்லாமே மஞ்சளாகதான் தெரியும். எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு வேறு வேலையில்லை அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளார்.

முதல்வர் அரசியல் தெரியாதவர் அல்ல. 60 ஆண்டுகள் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை இணைந்து கொண்டுள்ளார். அவர் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை. மக்களுடைய துயரைத்துடைப்பதற்கு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கும் உத்தம தலைவராக இருக்கின்றார். பத்திரிக்கை உலகம் சிறந்த முதலமைச்சர்களிலே 10ல் ஒரு தலைரவாக தேர்வு செய்துள்ளது என்றால், அவருடைய திறமைக்கும், அவருடைய ஆற்றலுக்கும், அவருடைய எளிமைக்கும், அவருடைய மனிதாபிமானத்திற்கும் இது எடுத்துக்காட்டு. டாக்டர் ராமதாஸ் எந்த ஊரிலே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் அமைச்சர் சேகர்பாபு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}