சென்னை: எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், எங்களுடைய கழக இளையரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அறிவிப்பை வெளியிடும் போது, அவர் கேட்டுக்கொண்டது, விளம்பர பாதாகைகள் வேண்டாம். ஆடம்பரங்கள் வேண்டாம், ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, அதே போல கருணை இல்லங்களுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு உதவித் தொகை ஆகிய உதவிகளைச் செய்ய அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில், நடந்த திருமணம் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று 21 ஜோடிகளுக்கு, வயிறார அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதை எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ள முடியும். பார்ப்பவர் கண்ணிலே கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது எல்லாமே மஞ்சளாகதான் தெரியும். எங்கள் தலைவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு வேறு வேலையில்லை அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளார்.

முதல்வர் அரசியல் தெரியாதவர் அல்ல. 60 ஆண்டுகள் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை இணைந்து கொண்டுள்ளார். அவர் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை. மக்களுடைய துயரைத்துடைப்பதற்கு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கும் உத்தம தலைவராக இருக்கின்றார். பத்திரிக்கை உலகம் சிறந்த முதலமைச்சர்களிலே 10ல் ஒரு தலைரவாக தேர்வு செய்துள்ளது என்றால், அவருடைய திறமைக்கும், அவருடைய ஆற்றலுக்கும், அவருடைய எளிமைக்கும், அவருடைய மனிதாபிமானத்திற்கும் இது எடுத்துக்காட்டு. டாக்டர் ராமதாஸ் எந்த ஊரிலே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் அமைச்சர் சேகர்பாபு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே
சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!
கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!
திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?
கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?
என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்
47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!
தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!
{{comments.comment}}