"நீங்க கலக்குங்க மேயர் மேடம்".. ஓடி வந்து சப்போர்ட் கொடுத்த "உடன்பிறப்பு"

Dec 08, 2023,06:18 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் மேயர் பிரியா நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

சென்னையை உலுக்கிய புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் புயலாக செயலாற்றி வருகிறது. மேயர் பிரியா, கமிஷனர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேரும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார்கள்.

புயலுக்கு முன்பிருந்தே இவர்களது பணி தொடங்கி விட்டது. குறிப்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஏரியா ஏரியாவாகப் போய் பணிகளை முடுக்கி விட்டும், உத்தரவுகளைப் பிறப்பித்தும் கொண்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்குல் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இரவு பகலாக மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியே அகற்றியும் வந்தனர்.



டாப் டூ பாட்டம் அத்தனை பேரும் இறங்கி வேலை செய்ததன் விளைவாக சென்னை மாநகரில் தற்போது நிலைமை நிறையவே மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையையும் பார்த்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களது குறைகளைக் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு மேயர் பிரியா பொறுமையாக விளக்கம்  அளித்து பதில் கூறினார்.

இதற்கு தற்போது டிஆர்பி ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், 

The way she responded without losing her cool ..  Mature & Dignified .. 
"கழகத்தோட #உடன்பிறப்பு"  நீங்க கலக்குங்க #Mayor madam. Just continue doing your job. 
...as always ...ALWAYS with the people...ON THE GROUND என்று கூறி ஊக்கம் அளித்துள்ளார்.

திமுகவினர் பலரும் வந்து இதில் மேயர் பிரியாவைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் பிற கட்சிகளைச் சேர்ந்தோர் பிரியாவை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்