"நீங்க கலக்குங்க மேயர் மேடம்".. ஓடி வந்து சப்போர்ட் கொடுத்த "உடன்பிறப்பு"

Dec 08, 2023,06:18 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் மேயர் பிரியா நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

சென்னையை உலுக்கிய புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் புயலாக செயலாற்றி வருகிறது. மேயர் பிரியா, கமிஷனர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேரும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார்கள்.

புயலுக்கு முன்பிருந்தே இவர்களது பணி தொடங்கி விட்டது. குறிப்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஏரியா ஏரியாவாகப் போய் பணிகளை முடுக்கி விட்டும், உத்தரவுகளைப் பிறப்பித்தும் கொண்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்குல் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இரவு பகலாக மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியே அகற்றியும் வந்தனர்.



டாப் டூ பாட்டம் அத்தனை பேரும் இறங்கி வேலை செய்ததன் விளைவாக சென்னை மாநகரில் தற்போது நிலைமை நிறையவே மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையையும் பார்த்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களது குறைகளைக் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு மேயர் பிரியா பொறுமையாக விளக்கம்  அளித்து பதில் கூறினார்.

இதற்கு தற்போது டிஆர்பி ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், 

The way she responded without losing her cool ..  Mature & Dignified .. 
"கழகத்தோட #உடன்பிறப்பு"  நீங்க கலக்குங்க #Mayor madam. Just continue doing your job. 
...as always ...ALWAYS with the people...ON THE GROUND என்று கூறி ஊக்கம் அளித்துள்ளார்.

திமுகவினர் பலரும் வந்து இதில் மேயர் பிரியாவைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் பிற கட்சிகளைச் சேர்ந்தோர் பிரியாவை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்