- மஞ்சுளா தேவி
மதுரை: காற்றின் சுழற்சியால் தென் தமிழகத்திற்கு பரவலாக நாளை வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதில் மதுரை தேனி விருதுநகருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும் தற்போது தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

மதுரையில் நள்ளிரவு 2 மணிக்கு கனமழையாக தொடங்கியது. மழை விட்ட பாடு இல்லை. தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. மதுரையின் தெற்கு பகுதியான அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தற்போது இப்பகுதிகளில் சுற்றி குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது . விடாத தொடர் மழையால் மேலும் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மழை கொட்டிக் கொண்டுள்ள போதிலும் கூட பள்ளி, கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை விடப்படவில்லை. இதனால் மாணவர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பள்ளிகளுக்காவது விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் தேனி மாவட்டத்திலும் விடாமல் மழை பெய்து வருகிறது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிவகங்கையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
விருதுநகரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிலிருந்தே மழை பெய்து வருகிறது.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}