- மஞ்சுளா தேவி
மதுரை: காற்றின் சுழற்சியால் தென் தமிழகத்திற்கு பரவலாக நாளை வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. இதில் மதுரை தேனி விருதுநகருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும் தற்போது தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
மதுரையில் நள்ளிரவு 2 மணிக்கு கனமழையாக தொடங்கியது. மழை விட்ட பாடு இல்லை. தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. மதுரையின் தெற்கு பகுதியான அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தற்போது இப்பகுதிகளில் சுற்றி குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது . விடாத தொடர் மழையால் மேலும் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மழை கொட்டிக் கொண்டுள்ள போதிலும் கூட பள்ளி, கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை விடப்படவில்லை. இதனால் மாணவர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பள்ளிகளுக்காவது விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் தேனி மாவட்டத்திலும் விடாமல் மழை பெய்து வருகிறது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிவகங்கையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
விருதுநகரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிலிருந்தே மழை பெய்து வருகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}