மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார்.. பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Dec 13, 2023,04:09 PM IST

- மஞ்சுளா தேவி


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.


இதே நிகழ்ச்சியில் துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.


சமீபத்தில் ஐந்து மாநிலங்களில்  சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களை மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தவர். இவரை நீக்கிவிட்டு புதிய முதல்வராக மோகன் யாதவை நியமித்துள்ளனர் .




உஜ்ஜைனி  தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன்  யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். போபாலில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கத்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


58 வயதான மோகன் யாதவ், பிஎஸ்சி ,எல்எல்பி , எம்பிஏ மற்றும் பிஎச்டி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். இவர் உஜ்ஜைனி தெற்கு தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சீனியர்கள் பலர் இருக்க, அவர்களை ஒதுக்கி விட்டு மோகன் யாதவுக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்