- மஞ்சுளா தேவி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இதே நிகழ்ச்சியில் துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களை மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தவர். இவரை நீக்கிவிட்டு புதிய முதல்வராக மோகன் யாதவை நியமித்துள்ளனர் .
உஜ்ஜைனி தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். போபாலில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கத்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
58 வயதான மோகன் யாதவ், பிஎஸ்சி ,எல்எல்பி , எம்பிஏ மற்றும் பிஎச்டி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். இவர் உஜ்ஜைனி தெற்கு தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சீனியர்கள் பலர் இருக்க, அவர்களை ஒதுக்கி விட்டு மோகன் யாதவுக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}