சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையானது இன்றும் தொடரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 373 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - கோத்தகிரி சாலையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் முறையாக இப்பகுதியில் மூன்று இலக்க அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எனவே கேரள எல்லையையொட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு பெருமழை கிடைத்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்றும் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. இன்றும் சில மணி நேரங்கள் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
{{comments.comment}}