சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையானது இன்றும் தொடரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 373 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - கோத்தகிரி சாலையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் முறையாக இப்பகுதியில் மூன்று இலக்க அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எனவே கேரள எல்லையையொட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு பெருமழை கிடைத்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்றும் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. இன்றும் சில மணி நேரங்கள் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
{{comments.comment}}