சென்னையில் மழை தொடரும்.. மேட்டுப்பாளையத்தைத் திணறடித்த கனமழை.. 8 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு!

Nov 23, 2023,09:13 AM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையானது இன்றும் தொடரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.




கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 373 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - கோத்தகிரி சாலையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் முறையாக இப்பகுதியில் மூன்று இலக்க அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எனவே கேரள எல்லையையொட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு பெருமழை கிடைத்து வருகிறது.


சென்னையைப் பொறுத்தவரை நேற்றும் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. இன்றும் சில மணி நேரங்கள் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி,  புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்