புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த இடத்தில்.. நெரிசலில் சிக்கி பெண் மரணம்.. மகன் கவலைக்கிடம்!

Dec 05, 2024,10:03 AM IST

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தை காண வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில், ஒரு பெண் பலியானார். அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2. இவர்களுடன் இணைந்து பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி தெலுங்கு மட்டுமல்லாமல்  தமிழ் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற ட்விஸ்ட்டை புஷ்பா 2 திரைப்படத்தில் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இதனால் புஷ்பா 2 படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். 


இதனையடுத்து படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து  முன்பதிவில் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம். இந்தப் பின்னணியில் நேற்று புஷ்பா 2 படத்தின் முதல் ஷோ வெளியானது. ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன்  வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தியேட்டரில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது. 




முதல் ஷோ சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்டத்தினர் முட்டி மோதினர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டனர். இதனால் பாதுகாப்பு கருதி தடியடி நடத்தி போலீசார்  கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது தனது  கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதில் ரேவதியும், அவரது குழந்தை ஒன்றும் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் ரேவதி உயிரிழந்தார். குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த இடத்தில்  தாய்  உயிரிழந்து, மகன் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் எப்படி இவ்வளவு கூட்டம் கூட காவல்துறை அனுமதித்தது என்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோல ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்