சென்னை: இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள முஃபாசா தி லயன் கிங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதேபோல் இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முபாசா தி லியன் கிங் ரிலீஸ் குறித்த தகவல் உலகமெங்கும் குட்டீஸ்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிமேஷன் திரைப்படமான தி லயன் கிங் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. நிஜ வாழ்க்கையில் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் அதன் பெயரையும் குரலையும் கேட்பதற்கே கம்பீரமாக இருக்கும். ஆனால் பகை, ஏமாற்றம், சூழ்ச்சி, அரியணை, ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு விலங்குகளை வைத்து தி லைன் கிங் படம் உருவாகி இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படத்தில் அடுத்த ராஜா சிம்பா என சிங்கக்குட்டியை தூக்கி காட்டும் போது அரங்கமே அதிர்ந்தது.
என்னதான் அது சிங்கமாக இருந்தாலும் முபாசாவிற்கு அநீதி இழைத்த அண்ணன் ஸ்காரை பார்க்கும்போது நமக்கும் கோபம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் இப்படத்தின் கதைக்களத்தோடு ஒன்றிப் போயிருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்திற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. இப்படி அனைவரையும் கவர்ந்த தி லைன் கிங் படம் சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
தி லயன் கிங் படம் எங்கிருந்தோ வந்த ஒரு ஆதரவற்ற சிங்கக்குட்டி அதாவது முபாசா எப்படி காட்டிற்கு ராஜாவானார் என்பதை அழகான கதைகளத்துடன் மிகவும் நேர்த்தியாக, மக்கள் மனதை கவரக்கூடிய வகையிலும் உருவாகி இருந்தது. அதேபோல் முபாசாவின் அண்ணனான ஸ்கார் எப்படி எதிரியாகிறார் என்ற கதைக்களமே முஃபாசா: தி லைன் கிங் திரைப்படத்தின் கதையாகும். இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
முஃபாசா தி லைன் கிங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிந்தி வெர்ஷனில் முபாஷாவுக்கு குரல் உதவி கொடுத்திருக்கிறார் ஷாருக் கான். அவரது மகன்கள் ஆர்யான் கான், அப்ராம் கான் ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இப்போதிருந்தே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}