ஆதரவற்றவன் அரசனான கதை.. முஃபாசா: தி லைன் கிங்.. டிசம்பர் 20 முதல்.. குட்டீஸ்களே ரெடியா!

Aug 12, 2024,04:52 PM IST

சென்னை: இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள முஃபாசா தி லயன் கிங்  படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதேபோல் இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முபாசா தி லியன் கிங் ரிலீஸ் குறித்த தகவல் உலகமெங்கும் குட்டீஸ்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அனிமேஷன் திரைப்படமான தி லயன் கிங் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. நிஜ வாழ்க்கையில் சிங்கம்  காட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் அதன் பெயரையும் குரலையும் கேட்பதற்கே கம்பீரமாக இருக்கும். ஆனால்  பகை, ஏமாற்றம், சூழ்ச்சி, அரியணை, ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு விலங்குகளை வைத்து தி லைன் கிங் படம் உருவாகி இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படத்தில் அடுத்த ராஜா சிம்பா என சிங்கக்குட்டியை தூக்கி காட்டும் போது அரங்கமே அதிர்ந்தது. 




என்னதான் அது சிங்கமாக இருந்தாலும்  முபாசாவிற்கு அநீதி இழைத்த அண்ணன் ஸ்காரை பார்க்கும்போது நமக்கும் கோபம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் இப்படத்தின் கதைக்களத்தோடு ஒன்றிப் போயிருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி  அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்திற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. இப்படி அனைவரையும் கவர்ந்த தி லைன் கிங் படம் சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. 


தி லயன் கிங் படம் எங்கிருந்தோ வந்த ஒரு ஆதரவற்ற சிங்கக்குட்டி அதாவது முபாசா எப்படி  காட்டிற்கு ராஜாவானார்  என்பதை  அழகான கதைகளத்துடன் மிகவும் நேர்த்தியாக, மக்கள் மனதை கவரக்கூடிய வகையிலும் உருவாகி இருந்தது. அதேபோல் முபாசாவின் அண்ணனான ஸ்கார் எப்படி எதிரியாகிறார் என்ற கதைக்களமே முஃபாசா: தி லைன் கிங் திரைப்படத்தின் கதையாகும். இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.


முஃபாசா தி லைன் கிங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிந்தி வெர்ஷனில் முபாஷாவுக்கு குரல் உதவி கொடுத்திருக்கிறார் ஷாருக் கான்.  அவரது மகன்கள் ஆர்யான் கான், அப்ராம் கான் ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இப்போதிருந்தே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்