ஹைதராபாத்: திடீரென கல்யாண வீடியோக்களில் நெட்பிளிக்ஸ் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. நயன்தாரவைத் தொடர்ந்து அடுத்து நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நாக சைதன்யா- சமந்தா ஆகியோரின் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ள நிலையில், நாகசைதன்யா-சோபிதா திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்றது. இந்த தகவலை நடிகர் நாகாரிஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நாகசைதன்யா-சோபிதா குடும்பத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைத்து மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் இரு வீட்டாரும். அதனைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாகசைதன்யா-சோபிதா திருமணம் இந்து முறைப்படி நடக்க உள்ளதாகவும், அதற்காக காஞ்சிபுரம் பட்டு புடவையை தேர்வு செய்து, அதனை தங்க ஜரிகையால் அலங்கரித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர்களது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில், நாகசைதன்யா-சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கி ஒளிபரப்பியது நெட்பிளிக்ஸ் என்பது நினைவிருக்கலாம். வழக்கமாக விஜய் டிவியில்தான் இப்படி கல்யாண வீடியோக்களை ஒளிபரப்பி கலக்குவார்கள். தற்போது அந்த இடத்தை நெட்பிளிக்ஸ் பிடித்து விட்டது போல.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}