ஏப்ரல் 1 முதல்.. புதிய வரி முறைகள் அமலுக்கு வந்தன.. என்னெல்லாம் மாறிருக்கு பாருங்க!

Apr 01, 2023,10:08 AM IST

டெல்லி:  ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் புதிய வரி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்ற முழு விவரத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்.

வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  புதிய வருமான வரி உச்சவரம்பு அமலுக்கு வந்துள்ளது. இது பலருக்கும் பயன் தரக் கூடியதாகும்.  

இந்த ஆண்டு முதல் புதிய வரி உச்சவரம்புதான் default ஆக இருக்கும். இது வேண்டாம், பழைய வரி முறையே தேவை என்றால் நாம் வருமான வரித் தாக்கலின்போது அதைக் குறிப்பிட வேண்டும்.  பட்ஜெட் உரையின் போது இதுகுறித்து விரிவாக தெரிவித்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.



இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்:

புதிய வரி முறை: புதிய வருமான வரி முறையை default ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. நமக்கு இது வேண்டாம் என்றால் அதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அப்போதுதான் பழைய முறை பின்பற்றப்படும்.

பழைய வரி முறையில், வீட்டு வாடகைப் படி, வீட்டுக் கடன் வட்டி, குழந்தைகளின் கல்விக் கட்டணம், தொழில் முறை வரி ஆகியவற்றை சலுகைகளாக காட்ட முடியும். புதிய வரி முறையில் இதைக் கணக்கில் காட்ட முடியாது.

புதிய வரிமுறைப்படி - வரிச் சலுகை உச்சவரம்புத் தொகையானது ரூ. 5 லட்சம் என்பதிலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டஉள்ளது. அதாவது புதிய வரிமுறைப்படி ரூ. 7 லட்சம் வரை வருட வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விதிக்கப்பட மாட்டாது. 

புதிய வருமான வரி உச்சவரம்பு விவரம்:

ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 6 முதல் 9 லட்சம் வரை - 10 சதவீத வரி.
ரூ.  9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 15 சதவீத வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை - 20 சதவீத வரி.
ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீத வரி.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு உச்சவரம்பு ரூ. 15 லட்சம் என்பதிலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்