ஏப்ரல் 1 முதல்.. புதிய வரி முறைகள் அமலுக்கு வந்தன.. என்னெல்லாம் மாறிருக்கு பாருங்க!

Apr 01, 2023,10:08 AM IST

டெல்லி:  ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் புதிய வரி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்ற முழு விவரத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்.

வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  புதிய வருமான வரி உச்சவரம்பு அமலுக்கு வந்துள்ளது. இது பலருக்கும் பயன் தரக் கூடியதாகும்.  

இந்த ஆண்டு முதல் புதிய வரி உச்சவரம்புதான் default ஆக இருக்கும். இது வேண்டாம், பழைய வரி முறையே தேவை என்றால் நாம் வருமான வரித் தாக்கலின்போது அதைக் குறிப்பிட வேண்டும்.  பட்ஜெட் உரையின் போது இதுகுறித்து விரிவாக தெரிவித்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.



இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்:

புதிய வரி முறை: புதிய வருமான வரி முறையை default ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. நமக்கு இது வேண்டாம் என்றால் அதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அப்போதுதான் பழைய முறை பின்பற்றப்படும்.

பழைய வரி முறையில், வீட்டு வாடகைப் படி, வீட்டுக் கடன் வட்டி, குழந்தைகளின் கல்விக் கட்டணம், தொழில் முறை வரி ஆகியவற்றை சலுகைகளாக காட்ட முடியும். புதிய வரி முறையில் இதைக் கணக்கில் காட்ட முடியாது.

புதிய வரிமுறைப்படி - வரிச் சலுகை உச்சவரம்புத் தொகையானது ரூ. 5 லட்சம் என்பதிலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டஉள்ளது. அதாவது புதிய வரிமுறைப்படி ரூ. 7 லட்சம் வரை வருட வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விதிக்கப்பட மாட்டாது. 

புதிய வருமான வரி உச்சவரம்பு விவரம்:

ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 6 முதல் 9 லட்சம் வரை - 10 சதவீத வரி.
ரூ.  9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 15 சதவீத வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை - 20 சதவீத வரி.
ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீத வரி.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு உச்சவரம்பு ரூ. 15 லட்சம் என்பதிலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்