சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்தப் பெண்ணிற்கு படுகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனைத் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்காக whatsapp குழுக்கள் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் பயணிக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவிகள், பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த whatsapp குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}