சென்னை: தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்தப் பெண்ணிற்கு படுகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனைத் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்காக whatsapp குழுக்கள் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 47 இடங்களில் whatsapp குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் பயணிக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவிகள், பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்த whatsapp குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுத் திருவிழா இல்லாமல்.. அவதூறுத் திருவிழா: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி
தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு
{{comments.comment}}