டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

Jun 10, 2025,10:25 AM IST

டெல்லி: டி20 கிரிக்கெட்டின் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று போற்றப்படும் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அனைத்து வடிவிலான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.


தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன், டி20 கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே பூரனின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. பூரன் தொடர்ந்து ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் (ஐபிஎல் போன்றவை) விளையாட விரும்பினாலும், இந்த முடிவு சர்வதேச அரங்கில் விளையாட்டின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக, அதிகமான கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகி, ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் உச்சகட்ட ஃபார்மில் இருந்தபோதே ஓய்வு முடிவை எடுத்துள்ளனர். 




மேற்கிந்தியத் தீவுகள் அணியை சர்வதேச அளவில் வழிநடத்திய பூரன், இதற்கு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு. தனது முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த பூரன், பல சிந்தனைகள் மற்றும் சுயபரிசோதனைக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன்.


இந்த விளையாட்டு எனக்கு மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு என பலவற்றையும் கொடுத்துள்ளது; தொடர்ந்து கொடுக்கும். அந்த மெரூன் நிற ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்திற்காக நின்று, களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தது... அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். அணிக்கு கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக எப்போதும் இருக்கும்.


ரசிகர்களுக்கு - உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. கடினமான தருணங்களில் நீங்கள் என்னை தூக்கி நிறுத்தினீர்கள், நல்ல தருணங்களை நிகரற்ற ஆர்வத்துடன் கொண்டாடினீர்கள். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு - இந்த பயணத்தில் என்னுடன் வந்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தன.


என் கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிவுக்கு வந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான எனது அன்பு ஒருபோதும் குறையாது. அணிக்கும் பிராந்தியத்திற்கும் வரவிருக்கும் பாதையில் வெற்றி மற்றும் வலிமையை மட்டுமே நான் விரும்புகிறேன் என்று பூரன் தெரிவித்துள்ளார்.


29 வயதான பூரன், டி20 சர்வதேச போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெறுகிறார். 106 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மேலும் 2,275 ரன்களுடன் அணியின் அதிக டி20 ரன் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்