சென்னை: தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி வட மாவட்டங்களில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது என்றும் அதேசமமய், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில்தான் சென்னைக்கு அருகே காற்றழுத்தம் நெருங்கி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறும் வகையில் நேற்று முதல் பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வடக்கு மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. வடக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இது ஸ்டார்ட்டிங்தான். பகலில் மழை பெரிதாக இருக்காது. பிரேக் எடுக்கும். இரவு முழுவதும் நல்ல மழை பெய்யும். எப்போதுமே இரவில்தான் மழை உச்சத்தைத் தொடும். ஒரு வேளை காற்றழுத்தம் நமக்கு அருகில் நெருங்கி வந்து நிலை கொண்டால் பகலிலும் கூட அதீத மழை இருக்கும்.
இன்று மழைக்கு சற்று ஓய்வு கிடைக்கலாம். எனவே அலுவலகம், பள்ளிக்கூடங்களுக்கு தாராளமாக போகலாம். வெயிலும் கூட லேசாக எட்டிப் பார்க்கும். இடை இடையே திடீர் மழை இருக்கும்.
கன மழை எப்போது?
காற்றழுத்தம் சென்னை கடற்கரைக்கு அருகே 16ம் தேதி நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 16 மற்றும் 17 தேதிகள்தான் நாம் கவனமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
வானிலை மைய எச்சரிக்கை
இதற்கிடையே, இன்று முதல் 17ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை விவரம் வருமாறு:
14ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - தேனி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
15ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
16ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
17ம் தேதி
ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}