இன்னிக்கு ஆபீஸ் போகலாம்.. ஸ்கூல் கூட போகலாம்.. வெயிலும் வரும்.. ஆனால்.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்!

Oct 14, 2024,09:59 AM IST

சென்னை:   தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி வட மாவட்டங்களில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது என்றும் அதேசமமய், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில்தான் சென்னைக்கு அருகே காற்றழுத்தம் நெருங்கி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


வட கிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறும் வகையில் நேற்று முதல் பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வடக்கு மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:




சென்னையில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.  வடக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இது ஸ்டார்ட்டிங்தான். பகலில் மழை பெரிதாக இருக்காது. பிரேக் எடுக்கும்.  இரவு முழுவதும் நல்ல மழை பெய்யும். எப்போதுமே இரவில்தான் மழை உச்சத்தைத் தொடும். ஒரு வேளை காற்றழுத்தம் நமக்கு அருகில் நெருங்கி வந்து நிலை கொண்டால் பகலிலும் கூட அதீத மழை இருக்கும்.


இன்று மழைக்கு சற்று ஓய்வு கிடைக்கலாம். எனவே அலுவலகம், பள்ளிக்கூடங்களுக்கு தாராளமாக போகலாம். வெயிலும் கூட லேசாக எட்டிப் பார்க்கும். இடை இடையே திடீர் மழை இருக்கும்.


கன மழை எப்போது?


காற்றழுத்தம் சென்னை கடற்கரைக்கு அருகே 16ம் தேதி நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 16 மற்றும் 17 தேதிகள்தான் நாம் கவனமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் கூறியுள்ளார்.


வானிலை மைய எச்சரிக்கை


இதற்கிடையே, இன்று முதல் 17ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை விவரம் வருமாறு:


14ம் தேதி


ஆரஞ்சு அலர்ட் - தேனி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.


15ம் தேதி  


ஆரஞ்சு அலர்ட் - விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால். மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.


16ம் தேதி 


ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.


17ம் தேதி 


ஆரஞ்சு அலர்ட் - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி. மற்ற மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்