வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்.. சீமான் மீது வழக்கு பதிவு செய்த.. பட்டாபிராம் போலீஸ்!

Aug 31, 2024,05:53 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி ஒரு சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பாடல்களை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து சாட்டை துரை முருகனை போலீசார் கைது செய்தனர்.




அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் எழுதியவர்களையும் பாடியவர்களையும் விட்டுவிட்டு இவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் அதே பாடலை சீமான் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி அஜேஷ் என்பவர் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பழங்குடியினர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. 


இந்த உத்தரவின் படி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்