வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்.. சீமான் மீது வழக்கு பதிவு செய்த.. பட்டாபிராம் போலீஸ்!

Aug 31, 2024,05:53 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி ஒரு சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பாடல்களை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து சாட்டை துரை முருகனை போலீசார் கைது செய்தனர்.




அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் எழுதியவர்களையும் பாடியவர்களையும் விட்டுவிட்டு இவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் அதே பாடலை சீமான் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி அஜேஷ் என்பவர் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பழங்குடியினர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. 


இந்த உத்தரவின் படி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்