சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி ஒரு சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பாடல்களை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து சாட்டை துரை முருகனை போலீசார் கைது செய்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் எழுதியவர்களையும் பாடியவர்களையும் விட்டுவிட்டு இவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் அதே பாடலை சீமான் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி அஜேஷ் என்பவர் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பழங்குடியினர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் படி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}