சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி ஒரு சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பாடல்களை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து சாட்டை துரை முருகனை போலீசார் கைது செய்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் எழுதியவர்களையும் பாடியவர்களையும் விட்டுவிட்டு இவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் அதே பாடலை சீமான் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி அஜேஷ் என்பவர் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பழங்குடியினர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் படி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}