என் அழகிய வளியே!

Nov 27, 2025,04:48 PM IST

- அ.வென்சி ராஜ்


பூகோளத்தை பிறகோளத்தில் இருந்து தனித்து காட்டுவதில் உனக்கு தான் அத்தனை பெருமையும்...


எத்தனை அடுக்காய் நீ பரவி கிடந்தாலும் எனக்கு அதெல்லாம் தேவையில்லை...

எனக்குத் தெரிந்தது  ஒன்றுதான்...


என்னருகில் நீ இருப்பாய்...

உன் அருகில் நான் இருப்பேன்... 


எனை விட்டு நீ பிரிந்தாலும். ..

உனை விட்டு நான் பிரிந்தாலும்...

இது வெற்றுடல் தான் என்று சொல்லி...

வேறு இடத்திற்கு எனை கொண்டு செல்ல ...

எட்டு கால்கள் வந்தல்லவா என் அருகில் நின்றிடுமே... 


மகிழ்வான வாழ்வுதனை என்றுமே எனக்கு அளிக்க.. 

என்னுள் வந்து உயிர் வளியாய் உலவுகிறாய்... 

விண்ணில் இருந்து தென்றலாய் தித்திக்கிறாய். .. 

சாதாரண காற்றாய் வந்து சகலமும் பார்த்துக் கொள்கிறாய்.. 

சற்று கோபமாய் இருந்தால் புழுதி வாரி கொட்டுகின்றாய். .. 

அனல் பறக்கும் கோபத்தில்

ஆழி சென்று  கடும்புயலாய் மிரட்டுகிறாய்... 

சுழன்று வரும் சோழி போல சுழல் காற்றாய் சீறுகின்றாய். . . 




உன்னை சுவாசித்து...

தென்றலாய் நேசித்து...

பழகிய நாங்கள்..

உன் விஸ்வரூபம் கண்டு வியந்து போகின்றோம்...


உன் இயல்பு அத்தனையும் தெரிந்திருந்தும்...

என் விருப்பம் ஒன்று மட்டுமே...

என்னருகில் நீ இருப்பாய்..

உன் அருகில் நான் இருப்பேன்... 


தீச்சுடர்தான் எரிந்திடவே

கட்டாயமாக நீ தான் வேண்டும்...

எரிகின்ற பொருள் அணைக்க. ..

இன்னொரு வடிவாயும்  நீதான் வேண்டும்... 


என்ன விந்தை என்று பார்த்தால் எங்கனுமே நீ தான் இருக்காய். .. 


நீ இல்லாத இடம் தனையே..

கண்டறிய ஆசைப்பட்டு எட்டு திக்கும் சுற்றி வந்தேன்..

எங்கனுமே உன் முகம் தான்...


பள்ளி சென்று படிக்கையிலே பாடத்திலும் நீ இருக்கிறாய்....

வீடு வந்து படுக்கையிலே விரவித்தான்  நீ இருக்கிறாய்...... 


மனமும் இல்லை. ..

நிறமும் இல்லை..

சுவையும் இல்லை..

உருவமில்லை....

வடிவ மில்லை...

இப்படி ஒன்னும் இல்லா 

 உன்னை வெச்சி மொத்த உலகமும் இயங்குதப்பா.. 


புல்லசைத்து...

பூவசைத்து...

மரமசைத்து...

மகிழ்வளிக்கும்...

என் உயிர் வளியே...

காற்றே...

என் அருகில் நீ இருப்பாய்...

உன் அருகில் நான் இருப்பேன்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக

news

பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை

news

திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்

news

பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!

news

வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

news

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்