இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!

May 07, 2025,04:57 PM IST

லாகூர்: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்து போய் விட்டனர். நானும் அதில் இறந்திருக்க வேண்டும். ஆனால் தப்பி விட்டேன் என்று கூறியுள்ளார் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார்.


இந்தியாவில் பல்வேறு கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய அமைப்புதான் இந்த ஜெய்ஷ் இ முகம்மது. இதன் தலைவனாக இருப்பவர்தான் மசூத் அஸார். இந்தியா இன்று அதிகாலையில் நடத்திய அதிரடி தாக்குதலில் பஹவல்பூரில் உள்ள மசூத் அஸாருக்குச் சொந்தமான தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தகர்க்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான மசூதியும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது.




இந்த நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக அஸார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் எனது குடும்பத்தினர். நான்கு பேர் எனது நெருங்கிய கூட்டாளிகள்.


எனது அக்காள், அவரது கணவர், ஒரு உறவினர், அவரது மனைவி, இன்னொரு உறவுக்காரர், உறவினர்களின் ஐந்து குழந்தைகள் என 10 பேரை எனது குடும்பம் பறி கொடுத்துள்ளது. இதில் நானும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அல்லா அந்த பாக்கியத்தை எனக்குத் தரவில்லை என்று கூறியுள்ளார் மசூத் அஸார்.


இந்த தாக்குதலில் பலியானவர்களில் அஸாருக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூட்டாளி, தனது தாயாருடன் உயிரிழந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்

news

Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?

news

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

news

79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!

news

சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்