வாஷிங்டன்: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார். இந்த நிலைமை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் 'OPERATION SINDOOR' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாங்கள் உள்ளே வரும்போது இதைப் பற்றி கேள்விப்பட்டோம். ஏதோ நடக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். இது விரைவில் முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் டிரம்ப்.
அதே நேரத்தில், இரு நாடுகளும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய அமைதியை மனதில் கொண்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!
{{comments.comment}}