வாஷிங்டன்: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார். இந்த நிலைமை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் 'OPERATION SINDOOR' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாங்கள் உள்ளே வரும்போது இதைப் பற்றி கேள்விப்பட்டோம். ஏதோ நடக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். இது விரைவில் முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் டிரம்ப்.
அதே நேரத்தில், இரு நாடுகளும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய அமைதியை மனதில் கொண்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
தொடர்ந்து 2வது நாளாக அமித்ஷாவை சந்தித்த வேலுமணி...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்
ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!
ஐபிஎல் ஒளிபரப்பிற்கு வங்கதேச அரசு அதிரடித் தடை
தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் ஆட்சியை பிடிப்போம்...அமித்ஷா நம்பிக்கை
ஓய்வூதிய திட்டம்...போர்கொடி உயர்த்தும் போக்குவரத்து தொழிலாளர்கள்
2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடல்
2025ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 12 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு
{{comments.comment}}