வாஷிங்டன்: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார். இந்த நிலைமை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் 'OPERATION SINDOOR' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாங்கள் உள்ளே வரும்போது இதைப் பற்றி கேள்விப்பட்டோம். ஏதோ நடக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். இது விரைவில் முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் டிரம்ப்.
அதே நேரத்தில், இரு நாடுகளும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய அமைதியை மனதில் கொண்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}