வாஷிங்டன்: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ள நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார். இந்த நிலைமை விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் 'OPERATION SINDOOR' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாங்கள் உள்ளே வரும்போது இதைப் பற்றி கேள்விப்பட்டோம். ஏதோ நடக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்கள். இது விரைவில் முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் டிரம்ப்.
அதே நேரத்தில், இரு நாடுகளும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பிராந்திய அமைதியை மனதில் கொண்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்
திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!
Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!
வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?
மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!
சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!
போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}