சாதி வெறி வேட்பாளரைத் திரும்பப் பெறுக.. திமுகவுக்கு நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை

Mar 19, 2024,05:51 PM IST

சென்னை: ஜாதி வெறியுடன் பேசியவரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளதால், இவரைத் திரும்பப் பெற திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிதான் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.  இக்கட்சியின் இளைஞர் அணி  செயலாளராக இருப்பவர் சூரியமூர்த்தி. இவரைத்தான் இந்தக் கட்சி தற்போது தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.




இவர் மிகுந்த ஜாதி வெறியுடன், கொலை வெறியுடன் பேசிய ஒரு பழைய வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து அவளது வயிற்றில் அவனது கரு வளர்ந்தால், அந்தக் கருவை மட்டுமல்ல, தாயோடு கருவறுப்போம். இருவரையும் கூப்பிட்டு பிரித்து வைப்போம்.. பிரிய மறுத்தால் இருவரையும் கொலையும் செய்வோம் என்று பேசியுள்ளார்.


இந்த வீடியோவை சுட்டிக் காட்டி இவரா, சமூக நீதி பேசும் திமுகவின் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்.. இவரை எப்படி திமுக அனுமதிக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் சூரியமூர்த்தியை உடனடியாக மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். 


பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்