சாதி வெறி வேட்பாளரைத் திரும்பப் பெறுக.. திமுகவுக்கு நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை

Mar 19, 2024,05:51 PM IST

சென்னை: ஜாதி வெறியுடன் பேசியவரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளதால், இவரைத் திரும்பப் பெற திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிதான் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.  இக்கட்சியின் இளைஞர் அணி  செயலாளராக இருப்பவர் சூரியமூர்த்தி. இவரைத்தான் இந்தக் கட்சி தற்போது தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.




இவர் மிகுந்த ஜாதி வெறியுடன், கொலை வெறியுடன் பேசிய ஒரு பழைய வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து அவளது வயிற்றில் அவனது கரு வளர்ந்தால், அந்தக் கருவை மட்டுமல்ல, தாயோடு கருவறுப்போம். இருவரையும் கூப்பிட்டு பிரித்து வைப்போம்.. பிரிய மறுத்தால் இருவரையும் கொலையும் செய்வோம் என்று பேசியுள்ளார்.


இந்த வீடியோவை சுட்டிக் காட்டி இவரா, சமூக நீதி பேசும் திமுகவின் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்.. இவரை எப்படி திமுக அனுமதிக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் சூரியமூர்த்தியை உடனடியாக மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். 


பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்