- பாவலர் மாயோன் மங்கை
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்ந்து காட்டு செயலில்
வழக்கு வரும்
வழுக்கல் வரும்
வலியும் பலம்
பழியும்
விழும்
செழிப்பும் இழிவும் சேர்ந்து வரும்
துக்கமும் துயரமும் துரத்தி வரும்
வாயைத் திறந்தால் வம்புவரும்
அடைத்தாயானால் வெம்பு வரும்

விட்டுக் கொடுப்பவன்
பிள்ளைப்பூச்சி
விடாது பிடித்தால் கொல்லிக்குச்சி
மனமே மனமே மயங்கி
விடாதே
தினமும் எண்ணி துவண்டு விடாதே
மழைத்துளிதான் அருவி யாகும்
அருவி தான் நதியாக
ஓடும்
நதி செல்லும் பாதையெல்லாம்
புல்லும் உண்டு புதரும்
உண்டு
முள்ளும் உண்டு கல்லும் உண்டு
பாம்பும் உண்டு பாறையுமே உண்டு
இதையெல்லாம்
நகர்ந்து செல்வதே நதி
கிணற்று நீராகத் தெளிவுபடு
இரும்பு பருத்தி தங்கம்
இவை அடிபட்டு அடிபட்டு அனுபவம் பெறுகிறது
பல அனுபவம் பலமானபாடம்
நீர் சேர்கின்ற பாத்திரமே அதன் வடிவம்
நீ நீராக இருந்தால் கடவுளுக்கும் கங்கை நீயே
அனுபவித்து வாழப்பழகு
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}