- பாவலர் மாயோன் மங்கை
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்ந்து காட்டு செயலில்
வழக்கு வரும்
வழுக்கல் வரும்
வலியும் பலம்
பழியும்
விழும்
செழிப்பும் இழிவும் சேர்ந்து வரும்
துக்கமும் துயரமும் துரத்தி வரும்
வாயைத் திறந்தால் வம்புவரும்
அடைத்தாயானால் வெம்பு வரும்

விட்டுக் கொடுப்பவன்
பிள்ளைப்பூச்சி
விடாது பிடித்தால் கொல்லிக்குச்சி
மனமே மனமே மயங்கி
விடாதே
தினமும் எண்ணி துவண்டு விடாதே
மழைத்துளிதான் அருவி யாகும்
அருவி தான் நதியாக
ஓடும்
நதி செல்லும் பாதையெல்லாம்
புல்லும் உண்டு புதரும்
உண்டு
முள்ளும் உண்டு கல்லும் உண்டு
பாம்பும் உண்டு பாறையுமே உண்டு
இதையெல்லாம்
நகர்ந்து செல்வதே நதி
கிணற்று நீராகத் தெளிவுபடு
இரும்பு பருத்தி தங்கம்
இவை அடிபட்டு அடிபட்டு அனுபவம் பெறுகிறது
பல அனுபவம் பலமானபாடம்
நீர் சேர்கின்ற பாத்திரமே அதன் வடிவம்
நீ நீராக இருந்தால் கடவுளுக்கும் கங்கை நீயே
அனுபவித்து வாழப்பழகு
Tamil Short Story: ராசிக்கல்!
எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!
Poem: ஆத்தோரம் பூத்த கன்னி
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
{{comments.comment}}