- பாவலர் மாயோன் மங்கை
விழிகளிலே உன் விழிகளிலே
புதுப்புதுக் கனவுகள் நான்
தந்தேன்
வழிகிறதே வழிகிறதே
துடைத்திடக் கரங்கள்
நான் தரவா
விழுகிறதே விழுகிறதே
கவித்துளி சிறகை
விரிக்கிறதே
தொடுகிறதே தொடுகிறதே
நினைவுகள் கனவுகள்
நெஞ்சினிலே
மலர்கிறதே மலர்கிறதே
தோட்டத்துப் பூக்களும்
மனதினிலே

கொதிக்கிறதே அனலடிக்கிறதே
மார்கழிப் பனியிலும்
தேகமுமே
தழுவிடுதே தழுவிடுதே
தளிர்க்கொடி அழகி உன்
நினைப்பே
பதிகிறதே பதிகிறதே
இதழுடன் இதழாக
இணைகிறதே
சொருகிடுதே சொருகிடுதே
விழிகள் இரண்டும்
சுகமாக
மருகுதடி மருகுதடி
சிந்திடடி சிந்திடடி சிந்தை
சிதையாமல்
ஓர் சொல்லே!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
எரிந்த கடிதத்தின் வாசனை!
துயரம் கொடுக்கும் உறவுகளின் இருண்ட பக்கங்கள்
Paavalar Maayon Mangai Poem: வழிகிறதே வழிகிறதே!
{{comments.comment}}